தூத்துக்குடி இன்னாசியார்புரம் கத்தோலிக்க ஆலயத்தில் அடிதடி போலீஸ் குவிப்பு
Автор: PEARL CITY NEWS
Загружено: 2025-12-07
Просмотров: 15038
தூத்துக்குடி இன்னாசியார் கத்தோலிக்க ஆலயத்தில் அடிதடி போலீஸ் குவிப்பு
தூத்துக்குடி கத்தோலிக்க திருமண்டலத்திற்கு சொந்தமான தூத்துக்குடி இன்னாசியார் ஆலயத்தில் பங்குத்தந்தையாக இருந்தவர் மீது எழுந்த பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை அந்த இடத்தில் இருந்து மாற்றம் செய்து தற்காலிகமாக மற்றொரு பங்குத் தந்தையை திருமண்டலம் நியமித்துள்ளது
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் இன்று ஞாயிறு ஆராதனையை நடத்த விடாமல் தடுத்து உள்ளன ஆனால் மற்றொரு தரப்பினர் ஞாயிறு ஆராதனை கண்டிப்பாக ஞாயிற்றுக் கிழமையான இன்று ஆராதனை நடத்தப்பட வேண்டும் இதை தடுக்க கூடாது என திருமண்டலம் நியமித்த பங்குத்தந்தை மூலம் நடத்த முயற்சித்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது காவல்துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றதுடன் இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயற்சித்தனர்
ஞாயிறு ஆராதனை நடத்தக் கூடாது என வழக்கறிஞர் கியூபட் தலைமையில் வழக்கறிஞர் மிகவும் மல்லு கட்டியதால் போலீசாரால் என்ன செய்வது என்று தெரியாமல் அவரை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர் .
ஆனால் சபை மக்கள் ஒரு தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்
பு தெரிவித்த வழறிஞரை விரட்டி அடித்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது ஆனால் திருமண்டலம் நியமித்த பங்குத் தந்தையர்கள் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவர் இன்றைய ஞாயிறு ஆராதனையை நடத்திக் கொண்டே இருந்தார்
கத்தோலிக்க ஆலயத்தின் உள்ளே போலீஸ் முன்னிலையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு கைகலப்பு நிகழ்வு தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: