கல்முனை கடைக்கரை பள்ளிவாசல் கொடியேற்றம்! | Kalmunai - Nagoor Meeraan | ஜிப்ரி மீராசாஹிபு (USA)
Автор: கலசம் - நெஞ்சில் இட்ட கோலம் எல்லாம் அழிவதில்லை.
Загружено: 2025-11-16
Просмотров: 11302
In Kalmunai — specifically Kalmunaikuddy — stands our historic 200+-year-old mosque, a true symbol of faith and unity. Every year, the entire village gathers for a 12-day celebration, one of the most famous kondaddam festivals in Sri Lanka, especially in our area. People of all backgrounds and religions join in — it’s always been a festival for every heart.
I carry countless childhood memories from those days — the joy, the laughter, the beach breeze, the night lights, and the pure fun. Those moments shaped me. They still live in my blood.
They inspired me to write and compose this song — just to relive that magic once again and to share it with everyone who carries Kalmunai in their heart.
Here is the Poem I wrote:
"நாகூர்மீரான் சாயிபு ஆண்டகை கொடியேற்றம் ,"
[Chorus]
நாகூர் மீரான் ஆண்டகை ....
எங்கள் கல்முனை கடைக்கரை பள்ளிவாசல்.....
நாகூர்மீரான் சாயிபு ஆண்டகை கொடியேற்றம் ,
ஊரே கூடி கொண்டாடும் அந்த உயிரோட்டம்.
கல்முனை கடற்க்கரை பள்ளிவாசல் வாசம்,
நெஞ்சில் நித்தம் ஓடும் புனித சுவாசம்.
பட்டொளி பறக்கும் தீனின் கொடி,
உள்ளம் எல்லாம் சிலிர்க்கும் மக்கள் கோடி.
[Chorus]
நாகூர் மீரான் ஆண்டகை ....
எங்கள் கல்முனை கடைக்கரை பள்ளிவாசல்.....
சுனாமி வந்தும் அசையவில்லை ஒரு கல்,
புயல்கள் தாங்கி நிமிர்ந்து நிட்கும் மினாராக்கள்.
அது அல்லாஹ்வின் கரம், அதிசய சின்னம்,
பல நூறு ஆண்டுகள் வாழும் — நம்பிக்கையின் விண்ணம்.
வானும் காற்றும் பாடும் அல்லாஹ்வின் துதிகள்,
மனமெல்லாம் நிறையும் மகிழ்ச்சி அலைகள்.
நிய்யத்து வைத்த கனவுகள் நனவாகும் வரம்,
மாயமாய் மறைந்து போகும் மனத் துயரம்.
[Chorus]
லா இலாக இல்லல்லா ... முஹம்மதுர்ர றஸூலுல்லா....
எங்கள் கல்முனை கடற்க்கரை பள்ளிவாசல் கொடியேற்றம்,
நெஞ்சில் வாழும் ஊண் உணர்வான சுவாசம்.
புனித மண்ணில் கால் பதித்து நடக்கும் நிமிடத்தில் ,
வாழ்வில் புது உணர்வு பிறக்கும் அந்த நொடியில்.
மினாராக்களை நிமிர்ந்து பார்க்கும் பொழுதில்,
நம்பிக்கை உயர்ந்து மலரும் நெஞ்சில் .
பன்னிரண்டு நாட்கள் துயரம் மறக்கும்,
அன்பும் அமைதியும் ஒன்றாய் நிறையும் .
உப்பு காற்றை உணரும் சுகமும்,
அலையின் ஓசையுடன் தவழும் பக்தி கீதமும்.
[Chorus]
நாகூர் மீரான் ஆண்டகை ....
எங்கள் கல்முனை கடைக்கரை பள்ளிவாசல்.....
கொடியேற்ற இரவு — ஓர் தெய்வக் காட்சி,
காற்றும் கடலும் அதில் சாட்சி.
எட்டு அடுக்கில் உயர்ந்த கோபுரம்,
ஈமான் ஒளியில் நெஞ்சம் பெருமை தரும்.
பக்கீர் சாயுபுமாரின் தக்பீர் ஓசை
றபான் இசையுடன் ரசிக்க ஆசை.
எங்கும் வண்ண விளக்குகளின் அலங்காரம்,
எங்கள் ஊரையே அழகாக்கும் சிங்காரம் .
[Chorus]
நாகூர் மீரான் ஆண்டகை ....
எங்கள் கல்முனை கடைக்கரை பள்ளிவாசல்.....
பொம்மைகள், பட்டு, வளையல் கடைகள் ,
கரும்பு , சர்பத் ஆயிரம் வகைகள்.
நண்பர்கள் சேர்ந்து நினைவுகள் பாட,
குழந்தைகள் ஓடி மணலில் விளையாட.
கடைசி நாள் கந்தூரி சோறு,
நரம்புகளில் ஓடும் பேரின்ப ஊறு.
தேக பலமும் மன பலமும் சேர,
ஆண்டவனை நன்றி சொல்வோம் சீர.
[Chorus]
நாகூர் மீரான் ஆண்டகை ....
எங்கள் கல்முனை கடைக்கரை பள்ளிவாசல்.....
சிறு பறவை போல் பாசம் பெருகும் ,
இந்த மண்ணில் நினைவுகள் மலரும்.
தூர தேசத்தில் வாழ்ந்தாலும்,
மறக்காது எங்கள் நெங்சம் எந்த நாளும் .....
[Chorus]
லா இலாக இல்லல்லா ... முஹம்மதுர்ர றஸூலுல்லா....
எங்கள் கல்முனை கடற்க்கரை பள்ளிவாசல் கொடியேற்றம்,
நெஞ்சில் வாழும் ஊண் உணர்வான சுவாசம்
கவிதை & ஒலி வடிவம் :
ஜிப்ரி மீராசாஹிபு
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: