ஸ்ரீ பீடாரி அம்மை அருட்புகழ்/"பிராமி என்னப் பெயர்"
Автор: Pongi Matalayam-Arutpugazh
Загружено: 2025-08-25
Просмотров: 82
பல கோவில்களுக்கு ச்சென்று அருட்கவியார் அந்தந்த இறைவனைப் பக்தியுறப்பாடுவார் உடன் இருந்த தமயனார் திருப்புகழ்மணி திரு. சுப்பிரமண்யன் அதை ஒரு காகிதத்தில் குறிப்பு எடுத்துக் கொள்வார். என்னே விந்தை, அவை வெறும் பக்திப் பாடல்களாக மட்டுமில்லாது 'சந்த விருத்தமாய்' அமைந்து தகுந்த இராகத் தாளத்தோடு இருந்தன .பல்லவி அனு பல்லவி சரணங்களோடும் இருந்தன சில.ஸ்ரீ ஸாதுராம் ஸ்வாமிகளைப் பற்றி எழுத்தாளர் பரணீதரன் அவர்கள் 'அருணாச்சல மகிமை' என்று ஆனந்த விகடனில் தொடராக எழுதிவர ஸ்வாமிகளைப் பற்றிய புகழ் பரவியது.
ஸ்வாமிகளின் பாடலில் எளிமை சுவை மிகுந்திருக்கும் பல சரித்திர நிகழ்வுகள் வெடித்து சிதறி வரும்.
பல்லாவரத்தைப் பல்லவபுரம் என்றும் பழவந்தாங்கலைப் பல்லவன் தாங்கல் என்றும் அழைத்தவர் அவர் .
ஸாதுராம் சுவாமிகளைப் பற்றிய பாடல்கள் அவர் தமையனார் வாக்குப்படி
"வள்ளிமலை வள்ளல் திருப்புகழ்ச்
சச்சிதானந்த மஹநீயர் தம்
ஒள்ளிய நற் சீடர்புகழ் ஓங்கு திருப்
போரூரான் உவந்து ஆட்கொண்ட
கள்ளமிலா துறவிவள்ளி பொங்கி வயி
ணவி பதங்கள் கருத்தில் வைத்த
தெள்ளியசீர் அருட்புகழ் சொல் ஸாதுராம்
ஸ்வாமி பதம் சிரமேற் கொள்வாம்"
என்று கீரனூர் இராமமூர்த்தி ஆன்மீக சொற்பொழிவாளர் அணிந்துரையாக ஒரு புத்தகத்தில் தந்துள்ளார்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: