திருச்செந்தூர் காவடி சிந்து | சூப்பர் சிங்கர் தன்யஸ்ரீ | கோவில் தரிசனம்
Автор: Kovil Dharisanam
Загружено: 2022-09-09
Просмотров: 1163456
பாடியவர் : சூப்பர் சிங்கர் தன்யஸ்ரீ
பாடலாசிரியர் : அன்பன் துரை நாகராஜன்
இசை : பக்தி இசை வேந்தர் கண்மணி ராஜா
ஒளிப்பதிவு : கோபி
தலைமை நிர்வாகம் : விஜய ஜெயந்தி
திருச்செந்தூர் காவடி சிந்து
செந்தூர் என்றொரு தேசம் – அங்கு
செந்தில் ஆண்டவர் வாசம் – ஒப்பு
இல்லை என சொல்லும்படி
உலகை அவன் காத்தபடி நின்றான்
எனை கொண்டான்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
பக்தர்கள் மீதுதான் பாசம் - பணிய
பாவங்கள் ஆகிடும் நாசம் – அந்த
தேவர்கள் துயர் போக்க
சூரனை வதம் செய்த பாலன்
பெரும் வீரன்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
ஆதிசங்கரர் நோய் தீர்த்தான் – அவர்
பாடிய புஜங்கம் கேட்டான் – பன்னீர்
இலை கொண்டு தருகின்ற
விபூதி அணிந்திட்டால் போதும்
நோய் போகும்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
குழந்தை வடிவிலே வந்தான் – குமர
குருபரன் வாய்பேசச் செய்தான் – கந்தர்
கலிவெண்பா அவர் பாட
தமிழ் தந்து அருள் செய்து நின்றான்
உள்ளம் மகிழ்ந்தான்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
சஷ்டியில் விரதம் இருந்து – அவன்
சன்னதி வந்து தொழுது – பிள்ளை
வரம் கேட்டால் வடிவேலன்
பிள்ளையாய் வந்தில்லம் பிறப்பான்
இன்பம் நிறைப்பான்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
ஓமெனும் பிரணவ வடிவம் – எங்கள்
ஓராறு முகனின் இல்லம் – மலை
ஏறும் சுமை கொடுக்காமல்
தரை மீதில் நின்றபடி அருள்வான்
வினை களைவான்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
வேல் வேல் என்று நீ பாடு – வெற்றி
கூடியே வந்திடும் பாரு - வளர்
பிறைபோல நலம் வளர
பிறை சூடி மகன் வேலன் அருள்வான்
வளம் தருவான்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
பாடலாசிரியர் : அன்பன் துரை நாகராஜன்
Kovil Dharisanam Instagram link :
https://www.instagram.com/tv/Cb8EQn0h...
Kovil Dharisanam Facebook link :
https://fb.watch/ctl4TbGuvr/
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: