Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

ரமணர் தத்துவம் பாமரனுக்கும் படித்தவனுக்கும்! RAMANA’S PHILOSOPHY FOR THE LAYMAN AND THE EDUCATED

Автор: தினசரி ரமண தியானம் Daily Ramana Dhiyanam

Загружено: 2025-11-15

Просмотров: 368

Описание:

.    நவம்பர் 16.            ஞாயிறு 

    

      பகவான் ரமணர் தத்துவம்-     பாமரனுக்கும் படித்தவனுக்கும்!


கல்லாதவனோ கற்றவனோ ஆத்மா ஒன்றே; ஆன்மாவிற்கு பேதம் கிடையாது. தான் பாமரன்  எனற எண்ணமும், தான்  பண்டிதன் என்ற ஆணவமும் நீங்கினால் அவன் ஆத்ம சொரூபம். 

—------------------------------------------------

          BAGHAVAN RAMANA’S

   PHILOSOPHY - FOR THE LAYMAN

            AND THE EDUCATED!


THE SOUL of the ILLITERATE and the EDUCATED is the same; there is no difference for the SOUL. When the thought of being a LAYMAN and the thought of being a SCHOLAR are removed, he becomes the SOUL..

—-----------------------------------------------

பகவான் ரமண மகரிஷியின் ஆத்ம தத்துவம் படித்தவனுக்கும் பாமரனுக்குமான எளிய தத்துவம்; தனித்துவமான பொதுவான தத்துவம். மிகவும் எளிமையாக இருப்பதால்தான் அதை நாம் புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. எளிமையான நம்மை மிகவும் சிக்கலாக்கி கொண்டு விட்டோம். அதுதான் பிரச்சினை. நம்மை விட்டு நாம் வெகு தூரம் விலகி விட்டோம்.


நம் இருப்பை விட்டு வெகுதூரம் தள்ளி வந்து விட்டோம். இருப்பினும் தன் வீட்டை யாராவது மறக்க முடியுமா? வீடு திரும்ப நினைப்பவர்களுக்கு அது சாத்தியமே. அது மிக சுலபமே. எனவே தான் பகவான் ஆத்ம வித்தை அதி சுலபம் என்று நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறார். 


ஒரு நாள் பகவான் புத்தர் சீடர்கள் முன் வந்து அமர்ந்து தான் வைத்திருந்த சிறிய துணியில் சில முடிச்சிகள் போட்டார். பிறகு சீடர்களைப் பார்த்து யாராவது இந்த முடிச்சிகளை அவிழ்க்க முடியுமா என்று கேட்டார்? ஒரு சீடன் எழுந்து சுவாமி முடிச்சி எப்படி போடப்பட்டுள்ளது? என்பது தெரிந்தால்தான் அதை அவிழ்க்க முடியும் என்று சொன்னான். ஆம். துணி அதே துணிதான். அதில் உள்ள முடிச்சிகள் அதை சிக்கலாகி விட்டது. எவ்வாறு முடிச்சி போடப் பட்டுள்ளது என்பதைப் பார்த்து அவிழ்த்தால் துணி பழைய நிலைக்கு திரும்பும் என்று உபதேசித்தார் புத்தர்.


புத்தர் கையிலிருந்த துணி எப்போதும் துணிதான். முடிச்சி விழும் முன்பும், முடிச்சி விழுந்த பின்னும், முடிச்சி அவிழ்க்கப்பட்ட பின்பும் துணியில் எந்த மாற்றமும் இல்லை. அது எப்போதும் துணிதான். உலகில் நீ யாராயினும், படித்தனோ, பாமரனோ  “நீ அது’” தான்.


பகவான் ரமண மகரிஷி கூறுகிறார்:  நீ எப்போதும் வேதங்கள் கோஷிக்கும் “அது நீ” எனப்படும் ஆத்ம சொரூபமாகவே இருக்கிறாய். படித்தவன்- பாமரன்,;  ஏழை-பணக்காரன்; முதலாளி தொழிலாளி, ஞானி அஞ்ஞானி; குரு- சிஷ்யன் என எல்லா இரட்டைகளிலும் பேதமற்று விளங்குவது  இறை சொரூபமான ஆத்மா. அது ஒன்றே.


ஒருவன் தன்னை பெரிய பணக்காரனாக எண்ணி இறுமாப்பு கொள்கிறான். மற்றொருவன் தான் ஏழையாக பிறந்து விட்டோமே என்று ஏங்கித் தவிக்கிறான்.  ஒருவன் தான் எல்லா சாஸ்திரங்களையும் கற்ற பண்டிதன் என்று ஆணவம் கொண்டு திரிகிறான். மற்றொருவனோ தான் கல்வி கற்க முடியாத கபோதி ஆகிவிட்டோமே என்று கவலை கொள்கிறான். இரண்டுமே கற்பனை. 


இவ்வாறாக ஒவ்வொருவரும் தங்களை கற்பனையாக நினைத்து நினைத்து மனதை கல்லாக்கி கொண்டு விட்டார்கள்.கல்லை சுமந்து திரிகிறோம் .இந்தப் பொய்யான கற்பனை உணர்வுகளே ஒருவரை மற்றொருவரிடம் இருந்து பிரிக்கிறது. பேதப்படுத்துகிறது. கல்லாக கடினமான நெஞ்சு கரைந்து உருகி நம்முடைய ஆதி இயல்பான எண்ணங்கள் அற்ற ஆத்ம நிலைக்கு திரும்ப வேண்டும். அருணகிரி நாதர் கந்தர் அனுபூதியில் “நெஞ்சக் கனகல்லும்  நெகிழ்ந்துருக தஞ்சத்தருள் சண்முகனுக்கு” என்று முருகப்பெருமானிடம் கல் நெஞ்சம் கரைந்துருக வேண்டுகிறார். 


பகவானுடைய உபதேசம் எதிர்மறையாக கருதப்படும் கற்றவன்- கல்லாதான் பணக்காரன்- ஏழை, குரு -சிஷ்யன் எல்லோருக்குமான பொதுவான எளிய உபதேசமாகும். பகவான் கூறுவதெல்லாம் தான் எதுவென்று தன்னைப் பாவித்து இருக்கின்றானோ அந்த எண்ணங்களை விடுத்து தன்னை யார்? என்று காண்பது ஆன்மிகம் என்று பணிக்கிறார். அது புதிதாக ஏதோ அடையப்படுவதில்லை. நம்மில் சேர்ந்துள்ள நல்ல -கெட்ட  நினைவுகளை நம்மில் இருந்து அகற்றி நம் ஆத்மாவை சுத்தம் செய்து கொள்வதுவே எல்லாம் என்று உபதேசிக்கிறார்.


புதிதாக ஏதாவது அடைவது என்றால் அதற்கு நாம் பிரயத்தனம் பண்ண வேண்டும். ஆனால் நாம் நம்மை அறியாமல் நம் மேல் ஏற்றிக்கொண்ட சுமையை இறக்கி வைப்பது எல்லோருக்கும் சுலபமானது தானே!. இயல்பானது தானே!  சுகமானது தானே! என்று பகவான் நம்மைப் பார்த்து கேட்கிறார். 


சுமந்து கொண்டிருக்கும் ஒருவன் எப்பொழுது தன் சுமை இறங்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பான.  நம்முடைய தவறான கற்பனைகளில் இருந்து விடுபடுவது தான் எல்லா ஆன்மிக சாதனைகளும். 


தத்துவந் தெரியா தத்தனை யுற்றாய் 

தத்துவ மிதுவென் னருணாசலா!

             “ஓம் தத் சத்”

—------------------------------------------------

 ரமணர் தத்துவம் பாமரனுக்கும் படித்தவனுக்கும்! RAMANA’S PHILOSOPHY FOR THE LAYMAN AND THE EDUCATED

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

குணங்களே நோயின் வேர்கள் |

குணங்களே நோயின் வேர்கள் |"Qualities as the Roots of Disease"

Polska Na Przetarg - Wizja Na Żywo

Polska Na Przetarg - Wizja Na Żywo

Его решения оказались сильнее времени

Его решения оказались сильнее времени

திரும்பி உன்னுள்ளேப் பார்! உலகம் புரியும்… SEE INSIDE!  UNDERSTAND THE WORLD

திரும்பி உன்னுள்ளேப் பார்! உலகம் புரியும்… SEE INSIDE!  UNDERSTAND THE WORLD

Brahman as Sat-Chit-Ānanda (சச்சிதானந்தம்) || அத்வைத வேதாந்தம் -3 ||

Brahman as Sat-Chit-Ānanda (சச்சிதானந்தம்) || அத்வைத வேதாந்தம் -3 ||

Старый фильм о йоге

Старый фильм о йоге "Таинственная йога"

Нам придумали реальность

Нам придумали реальность

ரமணரின் ஆத்ம சாட்சாத்காரம்: அசாதாரணமல்ல… சர்வ சாதாரணம்! 👇#spirituality #ramanamaharshi #ayya #tamil

ரமணரின் ஆத்ம சாட்சாத்காரம்: அசாதாரணமல்ல… சர்வ சாதாரணம்! 👇#spirituality #ramanamaharshi #ayya #tamil

Россиян изолируют от информации и знаний - Максим Шингаркин

Россиян изолируют от информации и знаний - Максим Шингаркин

Ученые открыли сумку месопотамского бога, результат поразил мир…

Ученые открыли сумку месопотамского бога, результат поразил мир…

தோன்றின மறையும்; மறைந்தனதோன்றும்;   இது இயற்கை நியதி! THOSE THAT APPEARS WILL DISAPPEAR;

தோன்றின மறையும்; மறைந்தனதோன்றும்;   இது இயற்கை நியதி! THOSE THAT APPEARS WILL DISAPPEAR;

எது நிலையான மௌனம் WHICH IS PERMANENT   SILENCE ?

எது நிலையான மௌனம் WHICH IS PERMANENT   SILENCE ?

Забытый метод выращивания картофеля, который даёт огромные урожаи без усилий

Забытый метод выращивания картофеля, который даёт огромные урожаи без усилий

Return to the Source || ரமண மகரிஷியின் தத்துவங்கள்-8||

Return to the Source || ரமண மகரிஷியின் தத்துவங்கள்-8||

அன்று என் தந்தைக்கு செய்தேன். இன்று நான் அனுபவிக்கிறேன்/padithathil pidithathu/Sirukathai

அன்று என் தந்தைக்கு செய்தேன். இன்று நான் அனுபவிக்கிறேன்/padithathil pidithathu/Sirukathai

எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு ONE SOLUTION FOR ALL PROBLEMS

எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு ONE SOLUTION FOR ALL PROBLEMS

ЭТОТ ЧЕЛОВЕК ПРИНИМАЕТ ВАЖНОЕ РЕШЕНИЕ ОТНОСИТЕЛЬНО ВАС || Карл Юнг

ЭТОТ ЧЕЛОВЕК ПРИНИМАЕТ ВАЖНОЕ РЕШЕНИЕ ОТНОСИТЕЛЬНО ВАС || Карл Юнг

ஐன்ஸ்டீன் தோற்ற இடம்! சிவவாக்கியர் வென்ற இடம்! ⚛️ அணு சொல்லும் ரகசியம்.

ஐன்ஸ்டீன் தோற்ற இடம்! சிவவாக்கியர் வென்ற இடம்! ⚛️ அணு சொல்லும் ரகசியம்.

«Это издевательское предложение». Уиткофф в Москве, переговоры России и Украины, Путин и миллиард

«Это издевательское предложение». Уиткофф в Москве, переговоры России и Украины, Путин и миллиард

Sathguru Sri Seshadri Swamigal Aradhanai Potri - Rendered by Alamelu

Sathguru Sri Seshadri Swamigal Aradhanai Potri - Rendered by Alamelu

© 2025 dtub. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: infodtube@gmail.com