நாகர்கோவில் அருகே தலைமுடி உதிர்ந்ததால் பெண் தற்கொலை
Автор: Beniel TV
Загружено: 2025-11-19
Просмотров: 4056
#kanyakumari #tamilnews #newstoday #benieltv #trending #breakingnews #viralnews #kumarinews #news #nagercoil கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் கீழச்சாலை பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா, வயது27, பி எஸ்சி பட்டதாரி. இவருக்கு கடந்த 3ஆண்டுகளாக தலைமுடி அதிக அளவு உதிர்ந்து வந்துள்ளது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஐஸ்வர்யா தனது பெற்றோரிடம் நான் உயிரோடு இருப்பதைவிட சாவதே மேல் என்று அடிக்கடி கூறி புலம்பி வந்துள்ளார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சமாதானம் செய்து வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஐஸ்வர்யாவின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது ஐஸ்வர்யாவின் படுக்கை அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. அப்போது அவர்கள் கதவை வெகு நேரம் தட்டி பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு அறையின் உள்ளே ஐஸ்வர்யா தற்கொலை செய்துகொண்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் மகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: