1300 ஆண்டுகள் பழமையான குளத்தை மீட்க களத்தில் இறங்கிய தஞ்சை இளைஞர்கள்..!
Автор: Local18 - Tamil Nadu
Загружено: 2023-08-30
Просмотров: 1872
தஞ்சாவூர் வல்லம் பகுதியில் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வஜ்ரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான பிரமாண்ட குளம் ஒன்று அதன் அருகிலேயே அமைந்துள்ளது.இக்குளமானது சுவரன் மாறன் கோட்டை என இப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது.
மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இக்குளத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை குளம் முழுவதும் நீர் நிரம்பி பசுமையுடன் காட்சியளித்தது. பல நூற்றாண்டுகளாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி வல்லம் பகுதி மக்களும் இக்குளத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் வல்லம் பகுதிக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர முக்கிய காரணமாக இக்குளம்திகழ்ந்துள்ளது.
பல வரலாற்றுச் சிறப்புகள் ஒளிந்திருக்கும் இக்குளம் கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பு தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் குளம் முழுவதும் கருவேல மரங்கள் காடு போல் வளர்ந்து குளம் இருந்த அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியது. இந்த நிலையில் வல்லம் பகுதி மக்கள் இக்குளத்தை மீட்டெடுத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அரசால் இக்குளத்தை மீட்டெடுக்க எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில்தமிழர்களின் நீர் மேலாண்மை-க்கு முக்கிய சான்றாக விளங்கும்வல்லம் சுவரன் மாறன் கோட்டை என்று அழைக்கப்படும் இக் குளத்தை மீட்டெடுக்க வேண்டும் என தஞ்சை யை சேர்ந்த வில்சன் பிரபு, சேதுபதி, ஹரிகரன் ஆகிய மூன்று இளைஞர்களும் தன்னார்வலர்களாக முன்வந்து பார்ப்பதற்கே திகில் ஊட்டும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ள இக்குளம் முழுவதும் நிறைந்துள்ள, கருவேலை மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
[caption id="attachment_1134275" align="alignnone" width="2828"] குளத்தை மீட்கும் முயற்சியில் களமிறங்கிய இளைஞர்கள்[/caption]
இந்த நிலையில்குளத்தை மீட்டெடுக்கும் பணியினை அவ்வபோது யூடியூப் உள்ளிட்டசமூக வலைதள பக்ககங்களிலும்பதிவிட்டு21 வாரங்களாக குளத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 70% பணிகள் நிறைவு பெற்றதாக இளைஞர் கூறும் நிலையில் இளைஞர்களின் பாராட்டக்கூடிய இந்த செயலை சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு இளைஞர்களின் இந்த முயற்சியை பாராட்டி ஊக்குவித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில்தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் தாமாக முன்வந்து இந்த இளைஞர்களுக்கு உறுதுணையாக ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை தோறும் குளத்தை மீட்டெடுக்கும் பணியில் தொடர்ந்து இருபது வாரங்களுக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர். அரசு செய்யக்கூடிய இந்த செயலை இளைஞர்கள் தாமாக முன்வந்து செய்வதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து மேலும் அந்த இளைஞர்கள் கூறுகையில், “வரலாற்று சிறப்புடைய பல்வேறு இடங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறோம் அந்த வகையில் வல்லம் பகுதிக்கு வந்த போது குளத்தின் மோசமான நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தோம் இக்குளம் பற்றிய பல தகவல்களை பற்றி தெரிந்து கொண்டு களத்தில் இறங்கி குளத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கிட்டத்தட்ட 70% பணிகள் நிறைவு பெற்றன.
இக்குளத்தில் கருவேலை மரங்களோடு மது பாட்டில்களும் குடித்துவிட்டு இங்கேயே பலர் உடைத்து ஆபத்தான நிலையில் மாற்றியுள்ளனர். பல இடர்பாடுகளையும் பொருட்படுத்தாமல் எப்படியாவது இந்த குளத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து எங்களது பணியினை செய்து வந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆதரவு இணையத்தில் இருந்தது.
இதையும் படிங்க : ராமநாதபுரத்தில் குவியும் பக்தர்கள்.. ரூ.2 கோடியை நெருங்கிய உண்டியல் வருவாய்!
அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களும் நேரடியாக இங்கு வந்து எங்களோடு இணைந்து பெருமையோடு குலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 30% வேலை தான் உள்ளது.மீதமுள்ள பணியினை ஓரிரு வாரங்களில் முடித்து விடுவோம் அதன் பிறகு இக் குளத்திற்கு நீர் நிரம்ப மழையை எதிர்பார்த்து வருகிறோம்” என்று கூறினர்.
இதுகுறித்து கல்லூரி மாணவி கூறுகையில், “எங்களுக்கு தஞ்சாவூர்ல இப்படி ஒரு குளம் இருக்குன்னு தெரியாது இந்த அண்ணன்களோட வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்தோம் பார்த்து ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு நம்ம முன்னோர்கள் உருவாக்கின இந்த குளத்தின் அவல நிலையை மீட்டெடுக்கும் பணியில் நம்மளோட பங்கும் இருக்கணும் அப்படின்னு நினைச்சேன் எங்களுக்கு முடிந்த வரை இவங்களோட சேர்ந்து இந்த பணியில் ஈடுபட்டு வருகிறோம்” என்று கூறினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
News18 Local is hyperlocal platform that brings you the latest news updates and videos from districts in Tamil language. News18 Local also covers local events, civic issues, informations, festivals, utilities, education and job opportunities, announcements, success stories, historical places, tourist spots around you.
நியூஸ்18 உள்ளூர் - மாவட்டங்களில் நிகழும் செய்திகள்,ஊர் சார்ந்த அடிப்படை பிரச்னைகள்,மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், திருவிழாக்கள், கல்வி, வேலைவாய்ப்பு தகவல்கள், அரசு அறிவிப்புகள், தொழிலில் முன்னேறியவர்கள், சாதனையாளர்களின் வெற்றி கதைகள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கோவில்கள், சுற்றுலா தலங்கள் என உங்கள் ஊர் தகவல்களை வீடியோவாக தரும் தமிழின் முதன்மையான தளம்.
Website: https://tamil.news18.com/local-news/
Follow us @
/ news18tamilnadu
/ news18tamilnadu
/ news18tamilnadu
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: