Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

பணக்கஷ்டம் நீங்க வாழ்வில் ஒரு முறையாவது தரிசனம் செய்ய வேண்டிய நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர்

Автор: ஆன்மீகத்துடன் நட்பு

Загружено: 2024-10-30

Просмотров: 24533

Описание:

பணப்பற்றாக்குறை போக்கும் குபேரனின் குமாரர்கள் வழிபட்ட நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்

மூலவர்: சுந்தரேஸ்வரர்
அம்பாள்: மீனாட்சி
புராண பெயர்: சென்னிவாய்க்கால்
ஊர்: நன்னிமங்கலம்
தலவிருட்சம்: பொன்வில் சாரம்

பொது தகவல்

நன்னிமங்கலம் கோவில்
சண்முகர் சன்னிதியில் மயில் தலை சுவாமிக்கு இடது
புறம் இருக்கும் முருகன் சூரபத்மனை வதம்செய்தபின் கோபம் தணிந்து சாந்தநிலைஅடையும்தருணம் .இவரை வழிபடுவோர் வாழ்வில் மனக்கிலேசங்கள் நீங்கப் பெற்று மனம் அமைதி பெறும்.
நாக லோக அதிபதி
அஸ்தீக சித்தர் தினமும் ககனயாத்திரையில் இவ்வாலயம் வந்து சிவனை மானசீகமாக பூஜை செய்வதாக ஐதீகம் இவருடைய சிலை விநாயகர் கோபுரத்தில் சப்தரிஷிகள் சிலைகளுடன் உள்ளது. இதனால் இக்கோவிலில் நாகங்களின் நடமாட்டம் அதிகம்
ஆவுடையார் கோமுகம் சுவாமியின் வலதுபுறத்தில் உள்ளது
பச்சை நிறம் புதனின் அம்சம்புதன் கல்விக்கு அதிபதி மாணவ மாணவிகள் பரீட்சை சமயத்தில் திரளாக வருவர் இறையருள்பெற.

திருவண்ணாமலையார் அருள் வழி காட்ட குபேரனின் புதல்வர்கள், பொன்வில் சாரத்தின் ரகசியத்தையும் மகிமையையும் உணர்ந்து வழிபட்ட ஆலயம் இது.

தலவரலாறு

பொன்னாலாகிய மூன்று வில்வ தளங்களை உடைய பொன் வில்வ சாரம் எந்த தேவலோகத் திலும் கிடைக்காத அருமை பெருமைகளை உடையது. எந்த ஒரு சுயம்பு லிங்கத்தின் மீது வைத்து ‘ஓம் நமசிவாய’ என்று ஓதி ஒரு முறை அர்ச்சித்து வழிபட்டால் உடனே அது பன்மடங்காகப் பெருகி பிரகாசித்து நிறைந்த செல்வத்தைத் தரும் அற்புதம் உடையது.

யோக தவ ஜப சக்திகளைப் பெற்றிருப்பவர் களைத் தவிர, இந்த பொன்வில்வ சாரம் எவர் கண்களுக்கும் தென்படாது. எவர் கரங்களிலும் நிலைத்து நிற்காது. இவ்வளவு மகிமையுடைய பொன் வில்வ சாரத்தை சிவபெருமான் குபேரனிடம் அளித்தார். குபேரன் இதை தன் குமாரர்களான மணிக்ரீவன், நளகூபன் இரு வரிடமும் அளித்து, பூலோகம் எங்கும் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளிடம் வைத்து வழிபட்டு இதன் மகிமையை அறிந்து வரும்படி கட்டளையிட்டார்.

சுயம்பு லிங்க பூஜையில் சிறப்பு பெற்றவர்கள் குபேரனின் குமாரர்கள். சிறந்த சிவ சேவகர்கள். எனவே அவர்கள் கண்களில் பொன் வில்வ சாரம் பட்டது. கரங்களில் நிலைத்து நின்றது. இதைக் கண்ட குபேரனுக்கு ஏக மகிழ்ச்சி.

மணிக்ரீவன், நளகூபன் இருவரும் புறப்பட்டனர். பொன்வில்வ சாரம் எந்த சிவாலயத்தில் பல மடங்கு ஒளி வீசும் என்ற தேவ ரகசியத்தை அறிய வேண்டுமே.

பூலோகமெங்கும் உள்ள சிவாலயங்களில் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளின் மீது வைத்து குபேரனின் குமாரர்கள் வழிபட்டனர். இந்த பொன்வில்வசாரம் பல இடங்களில் பசுமையாக சாதாரண வில்வ தளம் போல் காட்சி தர, சில இடங்களில் மறைந்தும் காணப்பட்டது.

பல நூறு ஆண்டுகள் தல யாத்திரை மேற்கொண்ட அவர்கள், பலநூறு சுயம்பு லிங்க மூர்த்திகளை தரிசித்தனர். பின்னர், பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாகத் திகழும் திருவண்ணாமலை வந்தடைந்தனர். பவுர்ணமி அன்று கிரிவலம் வந்து பொன்வில்வ சாரத்தை அண்ணாமலை ஆண்டவன் பாதங்களில் வைத்து ‘ஓம் நமசிவாய’ என்று ஓதினர். இதன் மகிமையையும் தெய்வீக ரகசியத்தையும் தங்களுக்கு உணர்த்துமாறு வேண்டி நின்றனர்.
அண்ணாமலையாரிடம் வில்வதளம் சொர்ணமாகப் பிரகாசித்தது. சென்னிவளநாடு செல்லும்படி அவர்களுக்கு அண்ணாமலையார் அசரீரியாய் வழி காட்டினார். குமாரர்கள் இருவரும் தென் திசை நோக்கி பயணமானார்கள். சோழ நாட்டிற்கு வந்து சேர்ந்தனர். திருத்தவத்துறை எனப் பெயர் கொண்ட தற்போதைய லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தின் சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி நீராடினர்.நீராடி எழுந்த அவர்கள் தாங்கள் வேறொரு ஆலயத்தில் இருப்பதை உணர்ந்தனர். தங்கள் கரத்திலிருந்த பொன்வில்வசாரம் மறைந்து போனது கண்டு பதறினர். எழுந்து அந்த ஆலயத்தின் கருவறை நோக்கிச் சென்றனர்.

அங்கே அவர்கள் ஓர் அதிசயத்தைக் கண்டனர். கரும்பச்சை வண்ணத்தில் ஜொலிக்கும் சுயம்பு லிங்கத் திருமேனியில் தாங்கள் கொண்டு வந்த பொன் வில்வசாரம் பொங்கிப் பொங்கி பன் மடங்காகப் பெருகி ஒளிவீசக் கண்டனர். இருவரும் மெய் சிலிர்த்து ‘ஓம் நமசிவாய’ என ஓதி அர்ச்சிக்க அது மேலும் மேலும் பொங்கி பன்மடங்கு ஒளி வீசத் தொடங்கியது. புதல்வர்கள் இருவரும் மனம் நிறைந்து மனம் நிறைய பூரிப்போடு தேவலோகம் சென்றனர்.

தன் புதல்வர்கள் பொன்வில்வ சாரத்தின் மகிமையையும், தேவரகசியத்தையும் உணர்ந்ததை அறிந்த குபேரன் மனம் மகிழ்ந்தார். தனக்கு கிட்டாத பாக்கியம் தன் புதல்வர்களுக்கு கிடைத்ததை எண்ணி மெய்சிலிர்த்தார். சோழநாட்டில் உள்ள சென்னி வள நாட்டிற்கு வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டார். பவுர்ணமி அன்று இந்த ஆலயம் வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை வலம் வந்து வழிபடும் பக்தர்கள், சகல நன்மைகளையும், பொருட்களையும் பெற குபேரன் அருள்பாலிக்கிறார்.

பிராத்தனை

பவுர்ணமி அன்று தலவிருட்சமான பென்வில்வ மரத்திற்கு, அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமம் சாத்தி, அடிப்பிரதட்சனம் செய்து இறைவன், இறைவியை வழிபட்டால் குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம்.

அமைவிடம்

திருச்சியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள நன்னிமங்கலம் என்ற கிராமத்தில் இருக்கிறது, இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 80A என்ற நகரப்பேருந்து லால்குடி வழியாக ஆனந்தி மேடு செல்லும். இந்த பேருந்தில் ஏறி சென்னிவாய்க்கால் சிவன் கோவில் என்ற நிறுத்தத்தில் இறங்கினால் அருகேயே உள்ளது ஆலயம். லால்குடியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயம் செல்ல ஆட்டோ வசதியும் உண்டு.

கோயில் Google Map Link

https://maps.app.goo.gl/BWtQwWusuLJus...

ஆலய Trustee தொலைபேசி எண்

+9 19486597484

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்

+91 7994347966

if you want to support our channel via UPI ID

nava@kvb

Join Our Channel WhatsApp Group

https://chat.whatsapp.com/LRPxBQMNHRA...


Join this channel to get access to perks:

   / @mathinam2301  

தமிழ்

பணக்கஷ்டம் நீங்க வாழ்வில் ஒரு முறையாவது தரிசனம் செய்ய வேண்டிய நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

அகால மரணம் அடைந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய அருளும் நரிக்குடி யமனேஸ்வரர் மிருத்யு தோஷம் நிவர்த்தி தலம்

அகால மரணம் அடைந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய அருளும் நரிக்குடி யமனேஸ்வரர் மிருத்யு தோஷம் நிவர்த்தி தலம்

முடக்கு தோஷம் நீக்கும் பலரும் அறியாத தாராசுரம் வீரபத்திரர் கோயில் | பஞ்ச குரோச தலம்

முடக்கு தோஷம் நீக்கும் பலரும் அறியாத தாராசுரம் வீரபத்திரர் கோயில் | பஞ்ச குரோச தலம்

இறைசபை இயல்பு நிலையில், வளர்த்து வார்த்தெடுத்த நிலையை, இறைசபை கலியுகத்திற்கு வரமருளுதல்.

இறைசபை இயல்பு நிலையில், வளர்த்து வார்த்தெடுத்த நிலையை, இறைசபை கலியுகத்திற்கு வரமருளுதல்.

2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிசய சிவன் கோயில் #trending #viral #youtubevideo #youtube

2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிசய சிவன் கோயில் #trending #viral #youtubevideo #youtube

Vijayapathi Vishwamitra | தலையெழுத்தை மாற்றும் ஸ்தலம் | விஜயாபதி விசுவாமித்திரர் கோயில்

Vijayapathi Vishwamitra | தலையெழுத்தை மாற்றும் ஸ்தலம் | விஜயாபதி விசுவாமித்திரர் கோயில்

சிவதிருத்தலங்கள் 03 : திருக்கோடிக்காவல் - ஶ்ரீ திருகோடீஸ்வரர் ஆலயம்

சிவதிருத்தலங்கள் 03 : திருக்கோடிக்காவல் - ஶ்ரீ திருகோடீஸ்வரர் ஆலயம்

வாழ்வில் இழந்த அனைத்தும் திரும்ப கிடைக்க வழிபட வேண்டிய வாத்தலை பாதாள ஈஸ்வரர் கோயில்

வாழ்வில் இழந்த அனைத்தும் திரும்ப கிடைக்க வழிபட வேண்டிய வாத்தலை பாதாள ஈஸ்வரர் கோயில்

சிவன் நினைத்தால் மட்டுமே நீங்கள் இந்த கோவிலுக்கு வரமுடியும் | Thirukollampudur | Vilvaraneswarar

சிவன் நினைத்தால் மட்டுமே நீங்கள் இந்த கோவிலுக்கு வரமுடியும் | Thirukollampudur | Vilvaraneswarar

நோய்கள் தீர்க்கும் திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் | Thiruvasi Matruraivaradeeswarar Temple

நோய்கள் தீர்க்கும் திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் | Thiruvasi Matruraivaradeeswarar Temple

உலகின் ஒரே அஷ்டம சனி பரிகார தலம்!! எட்டியத்தளி அகத்தீஸ்வரர் கோயில் | ராகு தோஷம்  நிவர்த்தி தலம்

உலகின் ஒரே அஷ்டம சனி பரிகார தலம்!! எட்டியத்தளி அகத்தீஸ்வரர் கோயில் | ராகு தோஷம் நிவர்த்தி தலம்

திருமணஞ்சேரி கோவில் வரலாறு | Thirumanancheri Temple History Tamil | Thirumananjeri Marriage Pooja

திருமணஞ்சேரி கோவில் வரலாறு | Thirumanancheri Temple History Tamil | Thirumananjeri Marriage Pooja

சனிபகவான் தினமும் வழிபடும் ஆதிகுடி அங்குரேஸ்வரர் கோயில் உடல் குறைபாடுகள் நீங்க வழிபட வேண்டிய தலம்

சனிபகவான் தினமும் வழிபடும் ஆதிகுடி அங்குரேஸ்வரர் கோயில் உடல் குறைபாடுகள் நீங்க வழிபட வேண்டிய தலம்

நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் / லால்குடி / Nannimangalam Meenakshi Sundareswarar Temple

நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் / லால்குடி / Nannimangalam Meenakshi Sundareswarar Temple

ஒரு முறை கிரிவலம் செல்ல வாழ்வில் ஏற்றம் தரும் நெடுங்குடி கைலாசநாதர் கோயில் | கடன் நிவர்த்தி தலம்

ஒரு முறை கிரிவலம் செல்ல வாழ்வில் ஏற்றம் தரும் நெடுங்குடி கைலாசநாதர் கோயில் | கடன் நிவர்த்தி தலம்

விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவில் Vishwamitrar Kovil @Deepamtamil

விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவில் Vishwamitrar Kovil @Deepamtamil

சாபமும் பாவமும் இருந்தால் இந்த கோவிலின் நிழலை கூட மிதிக்க முடியாது Achuthamangalam Someswarar Temple

சாபமும் பாவமும் இருந்தால் இந்த கோவிலின் நிழலை கூட மிதிக்க முடியாது Achuthamangalam Someswarar Temple

ஆவுடையார் கோவில் வரலாறு | Avudaiyar Temple History in Tamil

ஆவுடையார் கோவில் வரலாறு | Avudaiyar Temple History in Tamil

பிரதோஷ வழிப்பாட்டிற்காகவே கட்டப்பட்ட திருமண தடை நீக்கும் சக்தி வாய்ந்த சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயில்

பிரதோஷ வழிப்பாட்டிற்காகவே கட்டப்பட்ட திருமண தடை நீக்கும் சக்தி வாய்ந்த சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயில்

நிரந்தர வேலை கிடைக்க அருளும் 7000 ஆண்டு பழமையான தலையெழுத்தை திருத்தி அமைக்கும் திருத்தலையூர் ஈஸ்வரன்

நிரந்தர வேலை கிடைக்க அருளும் 7000 ஆண்டு பழமையான தலையெழுத்தை திருத்தி அமைக்கும் திருத்தலையூர் ஈஸ்வரன்

3000 ஆண்டுகளாக மூச்சுக்காற்றை வெளிப்படுத்தும் சித்தரின் ஜீவசமாதி !

3000 ஆண்டுகளாக மூச்சுக்காற்றை வெளிப்படுத்தும் சித்தரின் ஜீவசமாதி !

© 2025 dtub. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]