தர்ஷாசம்யுக்தா முதல் பிறந்தநாள் விழா...
Автор: KAGITHA SAKTHI Newschannel and Newspaper
Загружено: 2025-10-04
Просмотров: 29
அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் அருளால் நடைபெற்ற தர்ஷாசம்யுக்தா முதல் பிறந்தநாள் விழா...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே கம்மார்பாளையம் ஊராட்சி மனோபுரம் கிராமத்தை சேர்ந்த சாமி என்கிற பி.ராம்குமார் அவர்கள், வள்ளியம்மாள்ராம்குமார் அவர்கள் ஆகியோரின் மகன் வழி பேத்தியும், சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்த கே.ஆர்.வசந்தகுமார் அவர்கள் துர்காவசந்தகுமார் அவர்கள் ஆகியோரின் மகள்வழி பேத்தியும், பி.ஜி.விஜயகுமார் - கார்த்திகாதேவிவிஜயகுமார் தம்பதியரின் அன்பு மழலை தர்ஷாசம்யுக்தா முதல் பிறந்தநாள் விழா, 1.10.2025 அன்று மடிப்பாக்கம் நக்க்ஷத்திரா ரெஸ்டாரண்டில் மாலை 6 மணி அளவில் கொண்டாடப்பட்டன. இவ்விழாவில் சுற்றத்தார், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு குழந்தை தர்ஷாசம்யுக்தாவை வாழ்த்தினர். இவ்விழாவில் குழந்தைகள் மற்றும் பெரியோர்களை மகிழ்விக்கும் விதமாக "மேஜிக் ஷோ" சிறப்பாக நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் பிறந்தநாள் விழா கொண்டாட குழந்தையை மேடைக்கு அழைத்து வந்தபோது, குழந்தை தர்ஷாசம்யுக்தாவின் தாய் கார்த்திகாதேவிவிஜயகுமார் அவர்கள் சிநேகிதி படத்தில் உள்ள "தேவதை வம்சம் நீயோ, தேன் நிலா அம்சம் நீயோ, பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ" பாடலை அவரே பாடி சிறப்பித்தார். இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் குழந்தைகளுக்கான பென்சில், பென்சில்பாக்ஸ், வாட்டர் பெயிண்ட், பைனாகுலர், ஸ்டிக் வாட்ச் உள்ளிட்ட குழந்தைகளுக்கான "கிப்ட் பேக்" அனைவருக்கும் வழங்கப்பட்டன. சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டன. இவ்விழாவில் கலந்து கொண்டு குழந்தை தர்ஷாசம்யுக்தாவை வாழ்த்திய சுற்றத்தார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் விழாவின் முடிவில் நன்றி கூறினார் மனோபுரம் பி.ராம்குமார் அவர்கள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: