ராகாபின் விசுவாசம்
Автор: ஆத்மாவின் மன்னா.
Загружено: 2025-04-09
Просмотров: 92
எரிகோ பட்டணமானது அங்கு வாழ்ந்திருந்த மக்களால் மிகவும் சீர்கெட்டிருந்தது. சிலைகளை வழிபட்டனர். புனித விபச்சாரம் என்னும் தேவதாசிமுறை பழக்கத்திலிருந்தது. அந்தப் பட்டணத்தில் ராகாப் உயிர்குல விலைமகளாக வாழ்க்கை நடத்தி வந்தாள். ஆனால் நல்லதொரு உள்ளம் அவளுக்கிருந்தது. அதாவது உண்மையான தேவனை பற்றிய வாஞ்சை அவளிடமிருந்தது. அவள் தேவனின் பலத்த செய்கைகளைப் பற்றிக் கேட்டபோது, அவரில் விசுவாசம் வைத்தாள்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
யோசுவாவின் திட்டம்:
முதலில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு கானானில் இருந்தனர். ஆனால் கடைசியாக யாக்கோபு தன் குடும்பத்தாருடன் எகிப்துக்குப் போய்விட்டான். அங்கு 430 ஆண்டுகள் முடிந்து, கர்த்தர் மோசேயின் மூலம் அவர்களை வெளியே அழைத்து வந்தார். மோசே மரித்த பின் யோசுவாவின் தலைமையில் கானானுக்குள் பிரவேசிக்க இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்திய போது, எரிகோபட்டணம் அதற்குத் தடையாக இருந்தது. எரிகோ கானானிலிலுள்ள மிகவும் பெரிதான பட்டணம். இது செங்குத்தான மலையின் மேல் அமைந்திருந்தது. அதன் அடிவாரத்தைச் சுற்றிலும் பெரிய அகழி ஓடியது. இந்தப் பட்டணத்தின் கோட்டைச்சுவர் 32 அடியிலிருந்து 41 அடி உயரமும், 6 லிருந்து 10 அடி வரை அகலமும் கொண்டது. இதைப் பிடித்தால் கானானுக்குள் பிரவேசித்து . விடலாம். யோசுவா எரிகோ பட்டணத்தைச் சுதந்தரிக்க எது சிறந்த வழி என்று அறியவும், எதிரியைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், இரண்டு ஒற்றர்களாக காலேபையும், பினெகாஸையும் அனுப்பினான். அவர்கள் ராகாப் என்னும் வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே அவளிடம் எரிகோவைப் பற்றி விசாரித்தார்கள் ( 2 : 1).
ராகாபின் வீடு:
ராகாப் வேசியாக இருந்த போதிலும், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவளாயிருந்ததால் ராகாபின் வீட்டிற்குத் தேவன் அவர்களை வழிநடத்தினார். ராகாபின் வீடு எரிகோ பட்டணத்தின் அலங்கத்திலிருந்தது. எனவே அந்நியர்கள் அங்கு வரவும், தகவல்களைச் சேகரிக்கவும், உகந்த இடமாக இருந்திருக்கும். இங்கு வருபவர்களை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள். ராகாபின் வீட்டில் எளிதாகத் தகவல் கிடைக்கும் என்று நினைத்ததாலும், தப்பித்து ஓட வசதியாக அலங்கத்திற்குள் அந்த வீடு இருந்ததாலும், அங்கு ஒற்றர்கள் தங்கியிருந்திருக்கலாம். காலேபும், பினெகாஸும் தவறான நோக்கத்தோடு ராகாபின் வீட்டிற்குச் செல்லாமல் விசாரிப்பதற்கு மட்டுமே அங்கு சென்றனர். ஏனென்றால் பினெகாஸ் இஸ்ரவேலர் வேசித்தனம் செய்தபோது எழுந்து நியாயந்தீர்த்தவன்.
ராகாப் ஒற்றர்களிடம் கூறியது:
ராகாப் ஒற்றர்கள் வந்த காரியத்தைக் கேட்டவுடன், எரிகோ தகர்க்கப்படுமுன்னே “கர்த்தர் உங்களுக்குத் தேசத்தை ஒப்புக்கொடுத்தார்” என்று அவர்களிடம் கூறினாள். தாங்கள் கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப் போகப் பண்ணியதைக் கேள்விப்பட்டிருந்ததையும், யோர்தானுக்கு அப்புறத்தில் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கும், ஓகுக்கும் செய்ததைக் கேள்விப்பட்டிருந்ததையும் கூறினாள் (2 : 10) எரிகோ பட்டணத்தின் ஜனங்கள் பயத்தில் உறைந்து போயிருப்பதாகக் கூறினாள். அவர்களுடைய தைரியம் அற்றுப் போனதாகவும், திகில் பிடித்திருப்பதாகவும், சோர்ந்து போயிருப்பதாகவும் கூறினாள் (2 : 9, 11). ராகாப் கானானியப் பெண்ணாக இருந்தாலும், கர்த்தர் செய்த அற்புதங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாள். இந்தக் கேள்வி ஞானத்தினால் உண்மையான தேவன் யார் என்று கண்டுபிடிக்கத் தாகத்துடன் இருந்தாள். இவைகளைக் கேள்விப்பட்டு உண்மையான தேவன் கர்த்தர் தான் என்று விசுவாசித்திருந்தாள்.
எரிகோ ராஜாவின் கட்டளையும் செயலும்:
எரிகோ பட்டணத்தை வேவு பார்க்க ஒற்றர்கள் வந்திருக்கிறார்கள் என்பதையும், அதுவும் அவர்கள் ராகாபின் வீட்டிற்கு வந்திருப்பதையும் எரிகோவின் ராஜா கேள்விப்பட்டார். எனவே ராஜா ராகாபினிடத்திற்கு ஆளனுப்பி அவர்களை வெளியே கொண்டுவரக் கட்டளையிட்டார்.
ராஜாவின் ஆட்கள் ராகபினிடத்தில் வந்து, “உன் வீட்டிற்குள்ளிருக்கிற, தேசத்தை வேவுபார்ப்பதற்கு வந்த மனுஷர்களை வெளியே அனுப்பு” என்று கட்டளையிட்டனர் (2 : 2, 3).
ராகாபின் பதில்:
ராகாப் தன்னிடத்தில் மனுஷர்கள் வந்தது மெய்தான் என்றாள். அவர்கள் எந்த தேசத்திலிருந்து வந்தவர்களென்று தனக்குத் தெரியாது என்று பொய் சொன்னாள். இருட்டு வேளையில் அவர்கள் தன்னுடைய வீட்டைவிட்டுப் போய் விட்டதாகக் கூறினாள். அவர்கள் எங்கே போனார்கள் என்று தனக்குத் தெரியாது என்றாள். சீக்கிரமாய் போய்த் தேடினால் அவர்களைப் பிடிக்கலாம் என்று வந்தவர்களுக்கு ஆலோசனை கூறினாள். தன்னுடைய வீட்டிற்கு வந்த மனிதர்களைப் காப்பதற்காகத், தன் சொந்த ஜனங்களிடம் பொய் கூறினாள். பொய், தேவன் வெறுக்கும் பாவமாக இருந்தாலும் ராகபின் சம்பவத்தைப் பொறுத்தவரை அவளது பொய்க்கான அடிப்படைக் காரணமாக விளங்கியது அவளது விசுவாசமே. இஸ்ரவேலின் தேவனைப் பற்றிக்கொண்டிருந்த விசுவாசமே ஒற்றர்களை ஒழித்து வைக்கக் காரணமாயிற்று.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
ராகாப் செய்த செயலும், வேண்டுகோளும்:
ராகாப் சணல் தட்டைகளைப் பக்குவப்படுத்தி, அவைகளை உடைத்து உள்ளே உள்ள மெல்லிய நூலை எடுத்து அவைகளைப் பயன்படுத்தி இரத்தாம்பர விலையுயர்ந்த ஆடைகளை செய்து விற்று வந்தவள். ஆதலால் சணல் தட்டைகள் அவள் வீட்டிற்குள் இருந்தது. எனவே தன் வீட்டிற்கு வந்த மனுஷர்களை தன்னுடைய வீட்டின் மேல் ஏறப்பண்ணி வீட்டின் மேல் பரப்பப்பட்ட சணல் தட்டைகளுக்குள்ளே அவர்களை மறைத்து வைத்திருந்தாள். ராஜாவின் அதிகாரிகள் தன் வீட்டை விட்டு போகும் வரை அவர்களைக் கீழே இறக்காமல் காத்திருந்தாள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: