Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

தேவாரம் - காதலாகி கசிந்து -திருமணத் தடை நீங்கவும்,கடன் தீரவும்,நல்வழி காட்டவும் வேண்டி பாடும் பதிகம்

Автор: பக்திசை

Загружено: 2020-09-18

Просмотров: 6703

Описание:

To Support, Kindly Subscribe this Channel.
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : மூன்றாம் திருமுறை
பண் : கௌசிகம்
நாடு : பொது
தலம் : பொது
சிறப்பு: நமச்சிவாயத் திருப்பதிகம்

திருச்சிற்றம்பலம்
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
விளக்கம்: உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் “நமச்சிவாய” என்ற திருவைந்தெழுத்தாகும்.

பாடல் எண் : 02
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது ஒப்பது
செம்பொன்னார் திலகம் உலகுக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே.
விளக்கம்: சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக் கோடாக நம்பும் பக்தர்கள் திருவைந்தெழுத்தைத் தங்கள் நாவினால் உச்சரித்தால், நறுமணம் கமழும் நாண்மலர்களில் உள்ள தேன்போல இனிமை பயப்பது, எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது நம்முடைய சிவபெருமானின் திருநாமமான “நமச்சிவாய” என்னும் திருவைந்தெழுத்தே ஆகும்.

பாடல் எண் : 03
நெக்குள் ஆர்வம் மிகப்பெருகி(ந்) நினைந்து
அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவரா(க)த் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே.
விளக்கம்: உள்ளம் நெகிழ்ந்து அன்புமிகப் பெருக சிவபெருமானைச் சிந்தித்து, தமது அழகிய கையில் உருத்திராக்க மாலையைக் கொண்டு திருவைந்தெழுத்தை விதிப்படிச் செபிப்பவர்களைத் தேவர்களாக்கும் தகுதியைப் பெறும்படிச் செய்வது ஆடையில்லாத சிவபெருமானின் திருநாமமாகிய “நமச்சிவாய” என்னும் திருவைந்தெழுத்தேயாகும்.

பாடல் எண் : 04
இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்
நியமம் தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே.
விளக்கம்: தன்னை நாடோறும் தியானித்து வழிபடும் அடியவர்கட்கு என்றும் நன்மை செய்பவனும், நெற்றிக்கண்ணை உடையவனுமான சிவபெருமானின் திருநாமம் “நமச்சிவாய” என்ற திருவைந்தெழுத்தாகும். இனிமையான சொற்களால் திருவைந்தெழுத்தை நயம்பட ஓதவல்லவர்களை எவரேனும் அண்டினால், அங்ஙனம் அண்டியவர்களையும் அணுக இயமன் தூதன் பயப்படுவான்.

பாடல் எண் : 05
கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லான் நாமம் நமச்சிவாயவே.
விளக்கம்: கொலைத்தொழிலில் ஈடுபட்டவர்களாக இருப்பினும், நற்குணமும், பல நல்லொழுக்கங்களும் இல்லாதவர் ஆயினும் ஏதேனும் சிறு பூர்வ புண்ணியத்தால் திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் எல்லாவிதமான தீங்குகளினின்றும் நீங்குவர் என்று பெரியோர்கள் கூறுவர். அத்தகைய சிறப்புடையது எல்லோருக்கும் நன்மையே செய்பவனாகிய சிவபெருமானின் திருப்பெயரான “நமச்சிவாய” என்னும் திருவைந்தெழுத்தேயாகும்.

பாடல் எண் : 06
மந்தரம் அன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.
விளக்கம்: மந்தர மலை போன்ற பாவங்களைச் செய்து பாசங்களால் கட்டுண்டவர்களும், திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் அவர்களது கொடியவினைகள் தீர்ந்து போகும். அவர்கட்குச் செல்வமும் பெருகும். அத்தகைய சிறப்புடையது நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமான “நமச்சிவாய” என்பதாகும்.

பாடல் எண் : 07
நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே.
விளக்கம்: ஏழ் நரகங்கட்குச் செல்லக் கூடிய பாவிகளானாலும் திருவைந்தெழுத்தைப் பக்தியோடு உச்சரிப்பார்களேயானால், உருத்திர கணத்தாரோடு சேர்ந்து வசிக்கும் பேற்றினைப் பெறுவர். அடியவர்கள் கேட்ட வரமெல்லாம் தரும் சிவபெருமானின் திருநாமமான “நமச்சிவாய” என்பதாகும்.

பாடல் எண் : 08
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
தலங்கொள்கால் விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே.
விளக்கம்: இலங்கை மன்னனான இராவணன் திருக்கயிலையைப் பெயர்த்து எடுக்க முயல, சங்கரன் தன் காற்பெருவிரலை ஊன்றவும், கயிலையின் கீழ் நெருக்குண்டு அவன் வாய்விட்டு அலற அவனுக்கு உய்யும்நெறி அருளி, நன்மை செய்வதையே தன் இயல்பாக உடைய சிவபெருமானின் திருநாமமாகிய “நமச்சிவாய” என்ற திருவைந்தெழுத்தாகும்.

பாடல் எண் : 09
போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதம் தான்முடி நேடிய பண்பராய்
யாதும் காண்பரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே.
விளக்கம்: தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும், எல்லோருக்கும் தலைவரான சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் தேட முயன்று காண இயலாதவராகித் தம் செயலுக்கு வருந்திப் பின்னர் அவர்கள் நல்லறிவு பெற்று ஓதி உய்ந்தது “நமச்சிவாய” என்ற திருவைந்தெழுத்தேயாகும்.

பாடல் எண் : 10
கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுது செய்
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே.
விளக்கம்: தேவர்கள் வேண்ட நஞ்சினை உண்டு அதை கழுத்தில் தேக்கிய நீலகண்டனான சிவபெருமானின் திருநாமமாகிய “நமச்சிவாய” என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தை, மண்டை என்னும் ஒருவித பாத்திரத்தில் கஞ்சியைக் குடிக்கும் வழக்கமுடைய பௌத்தர்களும், கைகளையே பாத்திரமாகக் கொண்டு அதில் உணவு ஏற்றுப் புசிக்கும் வழக்கமுடைய சமணர்களும் ஓதும் பேறு பெற்றிலர்.

பாடல் எண் : 11
நந்தி நாமம் நமச்சிவாய எனும்
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே.
விளக்கம்: நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமாகிய “நமச்சிவாய” என்னும் திருவைந்தெழுத்தைச் சந்தம் மிகுந்த தமிழ் கொண்டு ஞானசம்பந்தன் அருளிச் செய்த இத்திருப்பதிகத்தைச் சிந்தை மகிழ ஓத வல்லவர்கள் பந்தபாசம் அறுக்க வல்லவர் ஆவர். திருச்சிற்றம்பலம்.

தேவாரம் - காதலாகி கசிந்து -திருமணத் தடை நீங்கவும்,கடன் தீரவும்,நல்வழி காட்டவும் வேண்டி பாடும் பதிகம்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

தேவாரம் - ஆண்டானை அடியேனை - கொடிய நோய்கள், தீவினைகள், நவக்கிரக தோஷங்கள் அகல 48 நாட்கள் கேட்க படிக்க

தேவாரம் - ஆண்டானை அடியேனை - கொடிய நோய்கள், தீவினைகள், நவக்கிரக தோஷங்கள் அகல 48 நாட்கள் கேட்க படிக்க

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி - தினமும் கேட்டு பயன் பெற சிவன் பக்தி பாடல்கள் - Pradosha Poojai

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி - தினமும் கேட்டு பயன் பெற சிவன் பக்தி பாடல்கள் - Pradosha Poojai

தேவாரம் - கள்ளார்ந்த பூங்கொன்றை -நோய் நொடிகள் அகல,ஜாதக தோஷங்கள் விலக,பிறவி முக்தியடைய தினமும் ஓதுவது

தேவாரம் - கள்ளார்ந்த பூங்கொன்றை -நோய் நொடிகள் அகல,ஜாதக தோஷங்கள் விலக,பிறவி முக்தியடைய தினமும் ஓதுவது

தேவாரம் - முளைத்தானை -சிவனடியை சிந்திப்பதால் கிடைக்கும் பயன்கள்-மனிதரனைவரும் ஓதவேண்டிய அற்புத பதிகம்

தேவாரம் - முளைத்தானை -சிவனடியை சிந்திப்பதால் கிடைக்கும் பயன்கள்-மனிதரனைவரும் ஓதவேண்டிய அற்புத பதிகம்

கண்ணில் கலந்தான் என் கருத்தில் கலந்தான்#திருவருட்பா ஆறாம் திருமுறை

கண்ணில் கலந்தான் என் கருத்தில் கலந்தான்#திருவருட்பா ஆறாம் திருமுறை

Thevaram - Vaazhga Anthanar | CURE SPINE & BACK PROBLEMS

Thevaram - Vaazhga Anthanar | CURE SPINE & BACK PROBLEMS

திருவாசகம் - வேண்டத்தக்கது அறிவோய் நீ - இறைவனிடம் வேண்டுதல் எவ்வாறிருக்க வேண்டும்?

திருவாசகம் - வேண்டத்தக்கது அறிவோய் நீ - இறைவனிடம் வேண்டுதல் எவ்வாறிருக்க வேண்டும்?

" செய்யனே" எதிரிகளை வெல்லும் பதிகம் தலம் ஆலவாய் மதுரை நன்றி குரலிசை கரூர் சாமிநாதன் ஓதுவார்

இடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் | Idarinum Thalarinum | Sivan Song | Vijay Musicals

இடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் | Idarinum Thalarinum | Sivan Song | Vijay Musicals

Thaan enai mun padaithaan / Sundarar Thevaram / Nodithaan Malai Uthamanea

Thaan enai mun padaithaan / Sundarar Thevaram / Nodithaan Malai Uthamanea

திருவாசகம் சிவபுராணம் சற்குருநாதன் ஓதுவார் அவர்கள் | Thiruvasagam Sivapuranam Sargurunathan Othuvar

திருவாசகம் சிவபுராணம் சற்குருநாதன் ஓதுவார் அவர்கள் | Thiruvasagam Sivapuranam Sargurunathan Othuvar

*தடை நீக்கும்* பதிகம் - திருநாவுக்கரசர் தேவாரம் 10/05/2020

*தடை நீக்கும்* பதிகம் - திருநாவுக்கரசர் தேவாரம் 10/05/2020

எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே திருப்புக்கொளியூர் அவிநாசி சுந்தரர் தேவாரம்

எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே திருப்புக்கொளியூர் அவிநாசி சுந்தரர் தேவாரம்

Thirunavukkarasar| Thevaram | CURES STOMACH AILMENTS| Kootrayinavaaru |Song | Thillai Vaazh Anthanar

Thirunavukkarasar| Thevaram | CURES STOMACH AILMENTS| Kootrayinavaaru |Song | Thillai Vaazh Anthanar

மறையுடையாய் - எடுத்த நல்ல காரியங்கள் தடையின்றி நடக்கவும், வீண் பழி நீங்கவும் இடர்களையும் சிவமந்திரம்

மறையுடையாய் - எடுத்த நல்ல காரியங்கள் தடையின்றி நடக்கவும், வீண் பழி நீங்கவும் இடர்களையும் சிவமந்திரம்

Madurai Arasalum Meenakshi Song - Super Singer Aruna Akila Performance | Bakthi Song | IBC Bakthi

Madurai Arasalum Meenakshi Song - Super Singer Aruna Akila Performance | Bakthi Song | IBC Bakthi

பொன்னார் மேனியனே | தேவாரம் -5 | Ponnar Meniyane | சுந்தரர்  | Thevaram| Sundarar

பொன்னார் மேனியனே | தேவாரம் -5 | Ponnar Meniyane | சுந்தரர் | Thevaram| Sundarar

03.004 திருவாவடுதுறை(திருஆவடுதுறை) | இடரினும் தளரினும் எனதுறுநோய் | திருஞானசம்பந்தர் தேவாரம்

03.004 திருவாவடுதுறை(திருஆவடுதுறை) | இடரினும் தளரினும் எனதுறுநோய் | திருஞானசம்பந்தர் தேவாரம்

தேவாரம் - தில்லைவாழ் அந்தணர் - இறைவன் மனம் குளிர, சிவனருளை எளிதில் பெற தொண்டாரை வாழ்த்தி பாடுவது.

தேவாரம் - தில்லைவாழ் அந்தணர் - இறைவன் மனம் குளிர, சிவனருளை எளிதில் பெற தொண்டாரை வாழ்த்தி பாடுவது.

Neela Ninainthadiyean  / நீள நினைந்தடியேன் / Sundaramoorthy Swamigal / Thevaram / Thirukkolili

Neela Ninainthadiyean / நீள நினைந்தடியேன் / Sundaramoorthy Swamigal / Thevaram / Thirukkolili

© 2025 dtub. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: infodtube@gmail.com