கல்யாண வரம் அருளும் சேலம் கரபுரநாதர் கோயில்-அங்கவை சங்கவை திருமணம்||
Автор: Sithan Pokku
Загружено: 2023-07-23
Просмотров: 22700
#sithanpokku feedback- [email protected]
#murugan #jeevasamadhi #uthamacholapuram #siddhargal #karadisiddhar #salem #salemvideos #karapuranathar #tiruvannamalai
உத்தமசோழபுரம் கரபுரநாதர் சிவாலயம்
Address-https://goo.gl/maps/nHDcMUcau39fy6hE8
தல சிறப்பு:
இந்த கோயிலில் உள்ள லிங்கம் ஒரு புறம் சாய்ந்தவாறு உள்ளது. இந்த ஈஸ்வரன் தலத்திற்கு அருகிலேயே ஓடும் திருமணிமுத்தாற்றில் பாண்டிய மன்னன் முத்துக்கள் எடுத்து சென்று, மதுரை மீனாட்சிக்கு மாலையாக போட்டதாகவும், அந்த முத்துமாலை இன்னும் மீனாட்சி கழுத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கரபுரநாதர் திருக்கோயில், உத்தமசோழபுரம் – சேலம் மாவட்டம்.
பொது தகவல்:
சோழர் காலத்தில் இந்த கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் பணி நிறைவடையவில்லை.
தொடர்ந்து தமிழக அரசால் ராஜகோபுரம் கட்டப்பட்டு கடந்த “92ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்கவும், பகை நீங்கவும் இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:
இந்த கோயிலுக்கு கடந்த 73 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது மரத்தேர் செய்து வெள்ளோட்டம் ஓடி, சித்திரை பவுர்ணமி திதியில் சித்ரா பவுர்ணமி உற்சவம் நடத்தப்பட்டது. அன்றிலிருந்து ஆண்டின் 12 மாதங்களும் உற்சவம், சுக்ரவார வழிபாடும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த கோயில் சண்டிஹோமம், பிரதோஷம் போன்ற வழிபாட்டிற்கு சிறப்பு பெற்றது.
இந்த கோயில் முகப்பு வாயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயில் அருகே ஒளவை சிலை நிறுவப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே பெரிய ஒளவையார் சிலை ஆகும். இந்த கோயிலின் பழமையும், வரலாற்று சிறப்பும், இலக்கியங்களில் பெற்ற இடம் பெருமைக்கு பெருமை சேர்ப்பதாய் அமைந்துள்ளன.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: