3000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் சிவசங்கர் பேட்டி
Автор: Star News Tamil
Загружено: 2025-12-04
Просмотров: 4723
போக்குவரத்து துறையில் விரைவில் 3000 பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் சிவசங்கர் பேட்டி
திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும்வகையில் நான்கு இடங்களில் இருந்து அரசு பேருந்துகளை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட் திருச்சி மண்டலம் மூலம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணாக்கர்கள் அதிகம் பயணிக்கும் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் மாணாக்கர்கள் மட்டும் எளிதாக பயணம் செய்யும் வகையில் கட்டணமில்லா நகரப் பேருந்து கீழ்கண்ட வழித்தடங்களில் இயக்கம் செய்யப்படுகிறது.
அதன்படி நான்கு வழித்தடத்தில்
பள்ளி நேரத்திற்கு ஏற்ற வகையில் காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களில் பேருந்து இயக்கப்படும் மாணவர்கள் மட்டும் பேருந்துகளை மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கோடியா சேர்த்து துவக்கி வைத்தனர்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது,
பள்ளி கல்லூரி தேவையான கூடுதல்பேருந்து இயக்கப்படும் வேண்டுமென வற்புறுத்தி வந்தனர் அதன் அடிப்படையில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையை குறித்து அவர்களின் தேவைக்கு ஏற்ப பேருந்களை இயக்க தமிழக முதல்வர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார்.
அதன்படி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள்பயன்பெறும் வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது புதுமை பெண் திட்டம் தமிழ் புதல்வன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துஉள்ளது.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு என தனியாக சிறப்பு பேருந்து வேண்டுமென தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி கோரிக்கை விடுத்தார். அதன் படி சென்னையில் ஆய்வு கூட்டம் நடத்தி தமிழக துணை முதல்வர் கடந்த மாதம் சென்னையில் உள்ள 85 பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த திட்டம் தமிழக முழுவதும் இன்று விரிவாக்கம்செய்யப்படுகிறது அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரில் இருந்து திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி வரை செல்லும் அதேபோல் மாலை திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு நவல்பட்டு அண்ணா நகர் வந்தடையும்.
அதே போல் திருவெறும்பூரில் நான்கு இடங்களில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில்உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் எங்கு எங்கு பேருந்துகள் கூடுதலாக தேவை என்பதை ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் இயக்கப்படும்.
மாதந்தோறும் மின்கணக்கீட்டு முறை செயல்படுத்துவதற்கு தற்பொழுது சுமட் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது அதை நிறைவடைந்த பிறகு அது நடைமுறைக்கு வரும்.
மேலும் போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்பொழுது 3000 பேர் நிரப்பப்பட உள்ளதாகவும் கூறினார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: