Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Trichy Sri Thayumanaswamy History, திருச்சி மலைக்கோட்டை வரலாறு

Автор: ADIGURU ஆதிகுரு

Загружено: 2019-04-29

Просмотров: 8570

Описание:

தாயுமானவர் திருக்கோயில்
தல வரலாறு:
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 69 வது தேவாரத்தலம் ஆகும்.

தாயுமானவர் திருக்கோயிலுக்கு தென்கைலாயம் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

தாயுமானவர்:-

இரத்தினாவதி என்ற பெண்ணிற்கு அவள் தாய் வடிவில் வந்து இறைவனே சுகப் பிரசவம் செய்வித்து அருளிய தலம் இதுவாகும். இத்தலத்தில் வசித்து வந்த இரத்தினாவதி என்ற பெண் ஒரு சிவபக்தை. அவளின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவி செய்ய அவள் தாயார் வெளியூரில் இருந்து வந்த போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவிரி நதியின் அக்கரையில் இருந்த இரத்தினாவதியின் தாயாரால் இக்கரை வ்ரமுடியவில்லை.இங்கு இரத்தினாவதிக்கு பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தனது பக்தையின் துயரம் கண்டு இறைவன் அவளது தாய் உருவில் வந்து இரத்தினாவதிக்கு சுகப்பிரசவம் ஆக அருள் செய்தார். இதனாலேயே இறைவன் தாயுமானசுவாமி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார். குழந்தைப் பேறு, சுகப்பிரசவம் ஆக இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளும் தலமாக இந்த சிவஸ்தலம் விளங்குகிறது.

கர்ப்பமுற்ற பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்காக தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தார் வாங்கிக் கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். பிரசவம் ஆன பிறகு தாயுமானவர் சந்ந்தியில் வாழைத்தாரைக் கட்டி அதை அர்ச்சகர் சற்று நேரம் ஊஞ்சல் போல ஆடவிட்டு பிறகு அங்கு வரும் பக்தர்களுக்கு வாழைப்பழங்களை பிரசாதமாக விநியோகிப்பார்கள்.

சுகப்பிரசவ வழிபாடு: மட்டுவார்குழலி அம்பாள் இவளுக்கு சுகந்த குந்தளாம்பிகை என்றும் பெயருண்டு. வாசனையுடைய கூந்தலை உடையவள் என்பது இதன் பொருள்.கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் வந்து, இந்த அம்பிகைக்கு 21 கொழுக்கட்டை, 21 அப்பம் படைத்து, ஒரு துணியில் மஞ்சள், குங்குமம், வெற்றிலையை கட்டி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இதனால், சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
வாழைத்தார்: குழந்தை வரம் கிடைக்கவும், சுகப்பிரசவம் ஆகவும் இத்தலத்தில் தாயுமானவருக்கு வாழைத்தார் படைத்து, பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.வாழை மரம், எப்போதும் அழிவில்லாமல் தழைத்துக் கொண்டே இருக்கும் தன்மையுடையது. இவ்வாறு வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு படைக்கிறார்கள். வாழையை மூலஸ்தானத்தில் வைத்து பூஜித்து, பின்பு அதை பிரசாதமாகக் கொடுத்துவிடுகிறார்கள்.

கோவில் அமைப்பு:
இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்குப் பார்த்த நிலையில் ஒரு பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலையில் உள்ள பாறைகள் மீது மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் பழங்கால கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. முதல் தளத்தில் இறைவி மட்டுவார் குழலம்மை சந்நிதியும், இரண்டாம் தளத்தில் இறைவன் தாயுமானசுவாமியின் சந்நிதியும் அமைந்துள்ளன. இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் மேற்குப் பார்த்தவாறு அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனிகளில் தாயுமானவர் லிங்கத் திருமேனியும் ஒன்றாகும். லிங்கத் திருமேனி சுமார் 5 அடி உயரம் உள்ளது.

கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திரவர்மனால் குடையப் பெற்ற இரண்டு குடவரைக் கோவில்கள் இங்கு உள்ளது. மலையின் உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோவில் இருக்கிறது.

மூலவர் கருவறை தெற்குச் சுற்றில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து அருள் பாவிப்பது மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாகும். இவரை வழிபட்டால் கல்வியும், ஞானமும் கிட்டும். இத்தலத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் சூரிய பகவானைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளதால் இங்கு வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும்.

இத்தலத்து முருகர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றவராவார். திருப்புகழில் 16 பாடல்கள் உள்ளன.

கோயில்களில் சிவன் சன்னதிக்கு எதிரில்தான் கொடிமரம் இருக்கும். ஆனால், இக்கோயிலில் சிவனுக்கு பின்புறம் கொடிமரம் இருக்கிறது. முன்பு இக்கோயிலில் சிவன் சன்னதி, கிழக்கு திசையை நோக்கி இருந்தது. எனவே, பிரதான வாசலும், கொடிமரமும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டது.

சாரமா முனிவருக்காக, மன்னனைத் தண்டிக்க சிவன் மேற்கு திசை நோக்கித் திரும்பி விட்டதால், சன்னதி வாசலும், கொடி மரமும் அங்கேயே நிலைத்து விட்டது.
சிவன் சன்னதி பிரகாரத்தில் மகாலட்சுமி, நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது சிலை மரத்தில் செய்யப்பட்டதாகும். குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக இவளுக்கு பால், தேன், குங்குமப்பூ சேர்ந்த கலவையை படைத்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். வெள்ளி தோறும் இவளுக்கு "ஸ்ரீவேத சூக்த மந்திர ஹோமம்' நடத்தப்படுகிறது. மற்றோர் சன்னதியில் மரத்தில் செய்யப்பெற்ற, துர்க்கையும் காட்சி தருகிறாள்.

சித்திரை பிரம்மோற்ஸவத்தின் 5ம் நாளில், சிவன் ரத்னாவதிக்கு பிரசவம் பார்த்த வைபவம் நடக்கிறது. அன்று, சோமாஸ்கந்தர் அருகில் கர்ப்பிணிப்பெண் ரத்னாவதியின் சிலையை வைக்கின்றனர். அப்போது, திரையிட்டு சிவன், ரத்னாவதி இருவரையும் மறைத்துவிடுவர். இவ்வேளையில் ரத்னாவதியின் மடியில் குழந்தை அமர வைத்து அலங்கரித்து, பின்பு திரையை விலக்கி தீபராதனை காட்டுவர். இந்த வைபவத்தின் போது, பிறந்த குழந்தைகளுக்குக் கொடுக்கும், மருந்து மற்றும் தைலமே பிரசாதமாக தரப்படும். இதைச் சாப்பிடும் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

கோயில் கொடிமரத்திற்கும், பலி பீடத்திற்கும் இடையில் கையில் சங்கு வைத்து ஊதியபடி சிவகணம் ஒன்று இருக்கிறது. இதை, "சங்குச்சாமி' என்று அழைக்கிறார்கள். இவர் எப்போதும் சிவனின் பெருமைகளை சங்கு ஊதியபடி சொல்லிக் கொண்டிருப்பாராம். எனவே இவர், கையில் சங்குடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவருக்கு, "சங்கநாதர்' என்றும் பெயருண்டு. சிவன் இக்கோயிலில் இருந்து புறப்பாடாகும் வேளையில், இவர் சங்கு ஊதி அறிவிப்பார் என்றும் சொல்வதுண்டு.
சிறப்புக்கள் :

Trichy Sri Thayumanaswamy History, திருச்சி மலைக்கோட்டை வரலாறு

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Thayumanavar Temple History  // தாயாய் மாறிய சிவன் // ஸ்ரீ தாயுமான சுவாமி திருக்கோவில் / திருச்சி

Thayumanavar Temple History // தாயாய் மாறிய சிவன் // ஸ்ரீ தாயுமான சுவாமி திருக்கோவில் / திருச்சி

சத்குரு ஞானி வெள்ளியங்கிரி சுவாமிகள் & வெள்ளியங்கிரி மலை | தென் கைலாசம் @Adiguru

சத்குரு ஞானி வெள்ளியங்கிரி சுவாமிகள் & வெள்ளியங்கிரி மலை | தென் கைலாசம் @Adiguru

பாகிஸ்தானில் தமிழ்யோகியின் ஜீவசமாதி

பாகிஸ்தானில் தமிழ்யோகியின் ஜீவசமாதி

மலைமேல் கட்டப்பட்ட பிரம்மாண்டம் | TRICHY MALAIKOTTAI | திருச்சி மலைக்கோட்டை | Biggest Hill Temple

மலைமேல் கட்டப்பட்ட பிரம்மாண்டம் | TRICHY MALAIKOTTAI | திருச்சி மலைக்கோட்டை | Biggest Hill Temple

வாழவே தகுதியில்லாத நாடு சவூதி ? | Ghazali | Saudi Arabia

வாழவே தகுதியில்லாத நாடு சவூதி ? | Ghazali | Saudi Arabia

Ученые открыли сумку месопотамского бога, результат поразил мир…

Ученые открыли сумку месопотамского бога, результат поразил мир…

Dual Rock cut Temples in Malayadipatti / மலையடிப்பட்டியில் உள்ள  இரட்டைக் குடைவரைக் கோவில்கள்

Dual Rock cut Temples in Malayadipatti / மலையடிப்பட்டியில் உள்ள இரட்டைக் குடைவரைக் கோவில்கள்

தமிழக வரலாற்றின் விபரீதம்! உயிருடன் எரிக்கப்பட்டாரா தாயுமானவர்! | Tamil Parambaryam!

தமிழக வரலாற்றின் விபரீதம்! உயிருடன் எரிக்கப்பட்டாரா தாயுமானவர்! | Tamil Parambaryam!

🚗 திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை என் பையனுக்கு ரொம்ப பிடிச்சு போயிடுச்சு | Srirangam | USA Tamil VLOG

🚗 திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை என் பையனுக்கு ரொம்ப பிடிச்சு போயிடுச்சு | Srirangam | USA Tamil VLOG

மாயம்மாவும் கன்னியாகுமரியும் @Adiguru Mayamma Devi Kaniyakumari

மாயம்மாவும் கன்னியாகுமரியும் @Adiguru Mayamma Devi Kaniyakumari

Tiruchendur Murugan Perumaigal திருச்செந்தூர் முருகனின் பெருமைகள்

Tiruchendur Murugan Perumaigal திருச்செந்தூர் முருகனின் பெருமைகள்

திருச்சி மலைக்கோட்டை | Trichy Malaikottai history | தாயுமானவர் & உச்சிப்பிள்ளையார் திருக்கோவில்

திருச்சி மலைக்கோட்டை | Trichy Malaikottai history | தாயுமானவர் & உச்சிப்பிள்ளையார் திருக்கோவில்

Life history - Thayumanavar Swamy | உச்சிப்பிள்ளையார்  | Dr.Sudha Seshyyan

Life history - Thayumanavar Swamy | உச்சிப்பிள்ளையார் | Dr.Sudha Seshyyan

இது ஒரு சமாதி அல்ல | சதாசிவ பிரம்மேந்திரர் இன்றும் வாழ்கிறார் @ADIGURU ஆதிகுரு

இது ஒரு சமாதி அல்ல | சதாசிவ பிரம்மேந்திரர் இன்றும் வாழ்கிறார் @ADIGURU ஆதிகுரு

History of Trichy | Kailash vicky | திருச்சி உருவான கதை தெரியுமா?

History of Trichy | Kailash vicky | திருச்சி உருவான கதை தெரியுமா?

Orae Jenmathil Mukthi..! | Unbelievable Way For Enlightenment..! | Sadhguru Tamil

Orae Jenmathil Mukthi..! | Unbelievable Way For Enlightenment..! | Sadhguru Tamil

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில் | அற்புதமான  சிவாலயம் | Saptharishishwarar Temple, Lalgudi

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில் | அற்புதமான சிவாலயம் | Saptharishishwarar Temple, Lalgudi

மும்மூர்த்திகள் ஒன்றாக அருளும் உலகின் ஒரே திவ்யதேசம் Uthamar Kovil Trichy பிச்சாண்டார் கோயில்

மும்மூர்த்திகள் ஒன்றாக அருளும் உலகின் ஒரே திவ்யதேசம் Uthamar Kovil Trichy பிச்சாண்டார் கோயில்

திருச்சி மலைக்கோட்டை பற்றி வியக்க வைக்கும் தகவல்😯 | Trichy Rock Fort untold Mystery Stories | MK

திருச்சி மலைக்கோட்டை பற்றி வியக்க வைக்கும் தகவல்😯 | Trichy Rock Fort untold Mystery Stories | MK

வெற்றிடமே மூலவராக உள்ள கோவில்|Chidambaram temple history|Pancha Bhootha sthalam| தில்லை சிதம்பரம்|

வெற்றிடமே மூலவராக உள்ள கோவில்|Chidambaram temple history|Pancha Bhootha sthalam| தில்லை சிதம்பரம்|

© 2025 dtub. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: infodtube@gmail.com