இந்தப் பாடலை மாலையில் பாட மனதின் ஊசலாட்டம் நிற்கும்
Автор: Aalayadharisanam
Загружено: 2023-06-02
Просмотров: 8163
இந்தப் பாடலை மாலையில் பாட மனதின் ஊசலாட்டம் நிற்கும்
திருமலைவாழ் பெருமானே தினம் தினம் சேவை
திகட்டாது தருவாய் நீ மாலையில் பூஜை
ஒருநாளும் மறவேனே உன்னடி காண
உயர்வாழ்வை தருவாயே ஊஞ்சலிலாடி
விலகாத வினைத்துயர்கள் விலகியே ஓட
விரைவாக வருவாயே திருமகளோடு
இடமாக அமர்ந்தவளாம் நிலமகள் சேர
இனிமை பெற புன்னகையில் ஊஞ்சலிலாடி
பனி சூழ்ந்த மலை மீது பரிவுடன் நின்று
உலக காளும் பெருமானே வந்தனன் இன்று
கனியிதழில் அரும்பி விடும் புன்னகை போதும்
களைந்து ஓடும் துயரமெலாம் ஊஞ்சலில் காண
அழகான தமிழினிலே பாடிய பாக்கள்
அன்போடு உன்னடியில் வீழ்ந்திடும் பூக்கள்
எழிலான முகஜோதி விரிந்திட வேண்டும்
எங்கெங்கும் திருவருளும் நிறைந்திட வேண்டும்
நவமான நல்லருளும் கிடைத்திட வேண்டும்
நவகிரக சோதனைகள் அகன்றிட வேண்டும்
திவம் தந்து உன்னருகில் இருத்திட வேண்டும்
திகட்டாத உன் நாமம் போற்றிட வேண்டும்
Composed By
Shri.S.Gokulachari
Editor,Aalayadharisanam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: