54 கீர்த்தனை | கல்வாரி மலையோரம் | Kalvari malaiyoram | composer thought | michael samraj
Автор: Composer Thought
Загружено: 2023-01-22
Просмотров: 1435
[email protected]
நண்பர்களே!
நாம் பாரம்பரியமாகப் பாடி வந்த பல கீர்த்தனைகள்
மறந்து போய் விட்டன. பல சபைகளில் கீர்த்தனைப் பாடல்கள் பாடுவது குறைந்துக் கொண்டே இருக்கிறது.
சிறந்த கருத்துக்கள் மற்றும் தூய தமிழ் வார்த்தைகள் நிறைந்த இந்தப் பாடல்களை நீண்ட காலம் வழக்கில் இருக்கும் ராகத்தோடு பாடி பதிவேற்றம் செய்யும் பணியை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்.
பாடல்களின் இராகங்கள் மட்டுமல்லாது அதற்கு Chordsம் இட்டிருக்கிறேன்.
கூடுமானவரை இதை அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
தங்கள் ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
W.Michael Samraj
to support, phone pay : 9443559470
ஆனந்தபைரவி ரூபகதாளம்
பல்லவி
கல்வாரி மலையோரம் வாரும்,
பாவம் தீரும்.
அனுபல்லவி
செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குறாரே
சரணங்கள்
1. லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு,
நொம்பலப்[1] படவைக்க ஐயன்மேல் உருண்டு,
தாகத்தால் வாடில்வாடிக் கருகியே சுருண்டு,
சடலமெல்லாம் உதிரப் பிரளயம் புரண்டு,
சாகின்றாரே நமது நாதா ஜீவதாதா[2] - ஜோதி - கல்
2. ஒண்முடி மன்னனுக்கு முண்முடியாச்சோ?
உபகாரம் பரிகரம் சிதையவும் ஆச்சோ?
விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ?
மேனியெல்லாம் வீங்கி விதனி[3]க்கலாச்சோ?
மேசையன் அப்பன் கோபம்மேலே இதற்குமேலே - ஜோதி - கல்
3. மலர்ந்த சுந்தரக் கண்கள் மயங்குவதுமேனோ?
மதுரிக்கும் திருநாவு வறண்டதுமேனோ?
தளர்ந்திடா திருக்கைகள் துவண்டதுமேனோ?
ஜலத்தில் நடந்த பாதம் சவண்டது[4] மேனோ?
சண்டாளர்கள் நம்மால்தானே, நம்மால்தானே - ஜோதி - கல்
4. ரட்சகனை மறந்தால் ரட்சண்யம் இல்லை,
நாமக்கிறிஸ்தவர்க்கு இருபங்கு தொல்லை,
பட்ச பாதம் ஒன்றும் பரதீசில் இல்லை,
பரதீசில் பங்கில்லோர்க்குப் பாடென்றும் தொல்லை,
பந்தயத்திலே முந்தப் பாரும், முந்தப் பாரும் - ஜோதி - கல்
ரத்ன பரதேசியார்
[1] துன்பம்
[2] தந்தை
[3] துயருடைய
[4] துவண்டது
54 கீர்த்தனை | கல்வாரி மலையோரம் | Kalvari malaiyoram | composer thought | michael samraj
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: