Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

நம்பியாண்டார் நம்பி - விநாயகர் அருள் I Nambiyandar Nambi Story in Tamil

Автор: I Bakthi Pasi

Загружено: 2023-02-05

Просмотров: 2042

Описание:

#ibakthipasi #ஐபக்திபசி #kannappan
தித்திக்கும் தேவாரம் 05


நம்பியாண்டார் நம்பிகள் வரலாறு

பதினொன்றாம் திருமுறையில் பத்துப் பிரபந்தங்களை அருளிச் செய்தவர் இவர். தேவாரத் திருமுறைகளை பொல்லாப் பிள்ளையார் துணைக்கொண்டு தில்லையிலிருந்து வெளிப்படுத்தியும் திருமுறைகளை வகுத்தும் தந்த பெருமைக்குரியவர் இவர்.

________________________________________________________________________

பிள்ளையார்க்கு அமுதூட்டல்

திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார்க்குப் பூசனை புரியும் ஆதி சைவக் குடும்பத்தில் தோன்றியவர் இவர். பெற்றோர் சிவபிரானைச் சுந்தரர் குறித்துப் போற்றும் நம்பி என்னும் பெயரைச் சூட்டி உரிய பருவத்தில் உபநயனம் செய்வித்து வேத சிவாகமங் களையும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் கற்பித்தனர். ஒருநாள் இவர் தந்தையார் வேற்றூர்க்குச் செல்ல நேரிட்டது. தந்தையார் தம் மைந்தரை அழைத்து பிள்ளையார்க்குப் பூசை நிவேதனம் செய்து பள்ளிக்குச் செல்லுமாறு பணித்து வெளியூர் சென்றார். தந்தை கட்டளைப்படி நம்பிகள் காலையில் எழுந்து நீராடி மலர் பறித்து மாலை தொடுத்துக்கொண்டு தாயார் தயாரித்து அளித்த நிவேதனத்துடன் ஆலயம் சென்றார். பிள்ளையார்க்குத் திருமஞ்சனம் முதலாயின செய்து தாயார் அளித்த நிவேதனத்தை எதிரே வைத்து பிள்ளையாரை அமுது செய்தருளுமாறு பலமுறையும் வேண்டி நின்றார். நாள்தோறும் தந்தையார் படைக்கும் நிவேதனத்தைப் பிள்ளையார் உண்டு வருவ தாக எண்ணிய நம்பிகள் தன் பூசையில் ஏதேனும் தவறு நேர்ந்ததோ என்று உளம் நைந்து வருந்தியவராய்ப் பிழையிருப்பின் மன்னித்து திருஅமுதை ஏற்றருள வேண்டும் என வேண்டினார். அதற்கும் பிள்ளையார் வாளா இருத்தலைக் கண்டு மனம் பொறாதவராய்த் தன் தலையைக் கோயில் சுவரில் மோதிக் கொள்ள முற்பட்டார். அது கண்டு திருவுளம் இரங்கிய பிள்ளையார் `குழந்தாய் பொறு` எனத் தடுத்து நிவேதனத்தை மகிழ்வோடு உண்டருளினார்.

________________________________________________________________________

கலைஞானம் கைவரப் பெறல்

இந்நிகழ்ச்சியால் நம்பிகள் பள்ளி செல்லக் காலம் தாழ்த்தது என்றும் இனிச் சென்றால் ஆசிரியர் தன்னைத் தண்டிப்பார் என்றும் கூறப் பிள்ளையார் நாமே அப்பாடங்களை உனக்கு கற்பிப்போம் எனக் கூறித் தாமே நம்பிகளுக்குத் தமிழ் கற்பித்தருளினார்.

நற்குஞ் சரக்கன்று நண்ணில் கலைஞானம்

கற்கும் சரக்கன்று காண் (திசுவருட்பயன் - 1)

என்னுமாப்போல விநாயகர் திருவருளால் நம்பிகள் கலை ஞானங்கள் அனைத்தும் கைவரப்பெற்றார்.

விநாயகர் மீது திரு இரட்டை மணிமாலை என்னும் பிரபந்தம் பாடிப் போற்றினார்.

இவ்வற்புத நிகழ்ச்சி நாடெங்கும் பரவியது. அதனைக் கேட்டு மகிழ்ந்த அபயகுலசேகரன் என்னும் இராசராச மன்னன் அப் பிள்ளையாரை வழிபடுதற் பொருட்டும் தன் உள்ளத்தில் நெடு நாட்களாக இருந்த கவலையைத் தீர்த்துக் கொள்ளற் பொருட்டும், விநாயகருக்கு உகந்த பழ வகைகள், கரும்பு, தேன், அவல், எள்ளுருண்டை முதலான பொருள்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு திருநாரையூர் வந்தடைந்தான். நம்பிகளை வணங்கி இவற்றைப் பிள்ளையார் ஏற்றுக் கொள்ளுமாறு செய்ய வேண்டினான். மன்னன் விரும்பிய வண்ணம் நம்பிகள் பிள்ளையார்க்கு அபிடேக ஆராதனை கள் புரிந்து மன்னன் கொண்டு வந்த நிவேதனப் பொருள்களைப் படைத்து அமுது செய்தருளுமாறு வேண்டிய அளவில் பிள்ளையார் அவற்றை ஏற்றருளினார்.

அது கண்டு மகிழ்ந்த மன்னன் தன் நெடு நாளைய கவலையை நம்பிகளிடம் தெரிவித்தான். மூவர் அருளிய தேவாரத் திருமுறைகளும், திருத்தொண்டர் வரலாறும் தமிழ் மக்க ளுக்குக் கிடைக்குமாறு செய்தருள வேண்டுமெனக் கேட்டுக் கொண் டான். நம்பிகள் மன்னனின் வேண்டுகோளைப் பிள்ளையாருக்குத் தெரிவித்தார். அவர் வேண்டுகோளை ஏற்ற பொல்லாப் பிள்ளையார் `தில்லையில் தேவாரமூவர் கையடையாளத்துடன் ஒரு அறையில் தேவாரத் திருமுறைகள் வைக்கப்பட்டுள்ளன` எனக் கூறியதோடு திருத்தொண்டர் வரலாறுகளையும் நம்பியாண்டார் நம்பிகளுக்கு உணர்த்தியருளினார்.

அவற்றைக் கேட்டு மகிழ்ந்த நம்பிகளும் அபய குலசேகரனாகிய சோழ மன்னனும் மகிழ்ந்து தில்லையை அடைந்து அவ்வறையைத் திறக்கு மாறு தில்லைவாழ் அந்தணர்களைக் கேட்டுக் கொண்டனர். தில்லைவாழ் அந்தணர்கள் தேவாரமூவர் கையடையாளம் இட்டுள்ளதால் அவர்கள் வந்தால் அன்றி அவ்வறைக் கதவைத் திறத்தல் இயலாது எனக் கூறக்கேட்ட மன்னன் மூவர் திருவுருவங் களுக்கும் அபிடேக ஆராதனைகள் செய்வித்து எழுந்தருளச் செய்து அவ்வறைக்கு எதிரே நிறுத்திட மூவரும் வந்துவிட்டனர். கதவைத் திறக்கலாமே எனக் கூறத் தில்லைவாழ் அந்தணர்கள் வேறு வழியின்றிக் கதவைத் திறந்தனர். அங்குப் பாதுகாப்பாக வைக்கப்பெற்றிருந்த ஏடுகளைக் கறையான் புற்று மூடியிருக்கக்கண்ட மன்னன் மனம் வருந்தி எண்ணெய் சொரிந்து புற்றை அகற்றிப் பார்த்த அளவில் ஏடுகளில் பல செல்லரித்திருந்ததை அறிந்து அளவிலாத துயருற்றான். அந்நிலையில் `தேவார ஏடுகளில் இக்காலத்துக்கு வேண்டுவனவற்றை மாத்திரம் வைத்து விட்டு எஞ்சியவற்றைச் செல்லரிக்கச்செய்தோம் கவலற்க` என்றொரு அசரீரி அனைவரும் கேட்க எழுந்தது. மன்னன் ஆறுதல் அடைந்து அவ்வேடுகளைச் சிதையாமல் எடுத்து அவற்றைத் தொகுத்துத் தருமாறு நம்பியாண்டார் நம்பிகளை வேண்டிக் கொண்டான்.

நம்பியாண்டார் நம்பி - விநாயகர் அருள் I Nambiyandar Nambi Story in Tamil

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

பன்னிரு திருமுறைகள் கிடைத்த வரலாறு I Panniru Thirumuraigal

பன்னிரு திருமுறைகள் கிடைத்த வரலாறு I Panniru Thirumuraigal

நம்பியாண்டார் நம்பி - விநாயகர் அருள் 🕉🙏l Nambiyandar Nambi Story in Tamil l G Gnanasambandan l Tamil

நம்பியாண்டார் நம்பி - விநாயகர் அருள் 🕉🙏l Nambiyandar Nambi Story in Tamil l G Gnanasambandan l Tamil

திருநாரையூர் ஸ்ரீபொல்லாப் பிள்ளையார் சிறப்பு வழிபாடு | Polla Pillayar | Cuddalore

திருநாரையூர் ஸ்ரீபொல்லாப் பிள்ளையார் சிறப்பு வழிபாடு | Polla Pillayar | Cuddalore

உயிர் மட்டுமே மிச்சம் உள்ளது | கண்கலங்கி சாபம்விட்ட ராமதாஸ் | RAMADAS | ANBUMANI | RAJAKAMBEERAN

உயிர் மட்டுமே மிச்சம் உள்ளது | கண்கலங்கி சாபம்விட்ட ராமதாஸ் | RAMADAS | ANBUMANI | RAJAKAMBEERAN

அதிபத்த நாயனார் வரலாறு | Adhipatha Nayanar Story in Tamil | 63 Nayanmars Devotional

அதிபத்த நாயனார் வரலாறு | Adhipatha Nayanar Story in Tamil | 63 Nayanmars Devotional

உத்தமி புதல்வனை மகிழ வைக்கும் வன்னி இலை | அருகு | மந்தார மலர் | வாசுகி மனோகரன் | ஆன்மீக சொற்பொழிவு

உத்தமி புதல்வனை மகிழ வைக்கும் வன்னி இலை | அருகு | மந்தார மலர் | வாசுகி மனோகரன் | ஆன்மீக சொற்பொழிவு

சித்தர் போகர் வரலாறு | The Shocking Secrets of Siddhar Bogar Revealed! | Deep Talks Tamil

சித்தர் போகர் வரலாறு | The Shocking Secrets of Siddhar Bogar Revealed! | Deep Talks Tamil

Sengottaiyan joining TVK Vijay | Paari Saalan and Varun Tamil podcast

Sengottaiyan joining TVK Vijay | Paari Saalan and Varun Tamil podcast

முருகனுக்கு குகன் என்ற பெயர் ஏன் வந்தது ?

முருகனுக்கு குகன் என்ற பெயர் ஏன் வந்தது ?

50 ஆவது திருவிளையாடல் | 50. சுந்தர பேரம் செய்த படலம் | 50TH THIRUVILAIYADAL

50 ஆவது திருவிளையாடல் | 50. சுந்தர பேரம் செய்த படலம் | 50TH THIRUVILAIYADAL

நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன பழனி ஆண்டவர் Murugan Tamil Movie Devotional Scenes | Truefix Movieclips

நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன பழனி ஆண்டவர் Murugan Tamil Movie Devotional Scenes | Truefix Movieclips

NAMBIYAANDAAR NAMBI ARULIYA THIRUNARAIYUR VINAYAGAR THIRUIRATTAI MANIMAALAI

NAMBIYAANDAAR NAMBI ARULIYA THIRUNARAIYUR VINAYAGAR THIRUIRATTAI MANIMAALAI

முருகனும் சிவனும் ஒன்றா ? I அறுமுகச் சிவன்

முருகனும் சிவனும் ஒன்றா ? I அறுமுகச் சிவன்

பிள்ளையாரையே பேச வைத்த நம்பியாண்டார் நம்பியின் அதிசயிக்கும் வரலாறு | Thirunaraiyur Polla Pillaiyar

பிள்ளையாரையே பேச வைத்த நம்பியாண்டார் நம்பியின் அதிசயிக்கும் வரலாறு | Thirunaraiyur Polla Pillaiyar

முஸ்லிம் நாடுகளில் இந்துக்களுக்கு ஏன் சலுகை இல்லை

முஸ்லிம் நாடுகளில் இந்துக்களுக்கு ஏன் சலுகை இல்லை

திருவாசக சிந்தனைகள் | சொ.சொ.மீனாட்சி சுந்தரம் ஐயா | 34ம் ஆண்டு தெய்வச்சேக்கிழார் திருமுறை மாநாடு

திருவாசக சிந்தனைகள் | சொ.சொ.மீனாட்சி சுந்தரம் ஐயா | 34ம் ஆண்டு தெய்வச்சேக்கிழார் திருமுறை மாநாடு

Dude Vs Ilayaraja | இளையராஜா Vs DUDE.. இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு?- நீதிபதி செந்தில்குமார் கேள்வி

Dude Vs Ilayaraja | இளையராஜா Vs DUDE.. இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு?- நீதிபதி செந்தில்குமார் கேள்வி

விநாயகர் பெருமானை உங்கள் கனவில் கண்டால் அர்த்தம் | Zio Tamil | Dream Meaning in Tamil

விநாயகர் பெருமானை உங்கள் கனவில் கண்டால் அர்த்தம் | Zio Tamil | Dream Meaning in Tamil

தில்லைவாழ் அந்தணர்கள் வரலாறு | பெரியபுராணம் சொற்பொழிவு | So So Meenakshi Sundaram Speech |

தில்லைவாழ் அந்தணர்கள் வரலாறு | பெரியபுராணம் சொற்பொழிவு | So So Meenakshi Sundaram Speech |

Смерть Имрана Хана? Шокирующее видео с кровью на его лице потрясло мир, положив конец Пакистану.

Смерть Имрана Хана? Шокирующее видео с кровью на его лице потрясло мир, положив конец Пакистану.

© 2025 dtub. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]