Thiruppugazh paayiram songs
Автор: Chinmaya Sarveshwara
Загружено: 2021-07-06
Просмотров: 1531
The Thiruppugazh paayiram songs are sung by those who do regular pArAyanam of Thiruppugazh. The author is unknown. These songs speak about the glory of the text, benefits of listening to Thiruppugazh, benefits of singing Thiruppugazh, Devotees' strength by singing.
நூற் சிறப்பு
-----------------------
1. எல்லாரும் ஞானத் தெளிஞரே?
கேளீர், சொல்
கல் எல்லாம் மாணிக்கக் கல்லாமோ? –
பொல்லாக் கருப்புகழைக் கேட்குமோ?
கானமயில் வீரன்
திருப்புகழைக் கேட்குஞ் செவி.
2. மாணிக்கம் பூண்பார்க்கு மற்றொருகல் வேண்டுமோ?
ஆணிப்பொன் கையுறுவார்க்கு
ஐயுறவு ஏன்? –
பேணிப்பின் செவ்வேல் விநோதன் திருப்புகழ் சிந்தித்து இருப்பார்க்கு
எவ்வேலை வேண்டும் இனி?
3. சீர்ஆம் திருப்புகழைச் செவ்வேள்மேல்
அன்பாக ஆராய்ந் துரைத்தான் அருணகிரி; -
நேராக அந்தப் புகழை அநுதினமும் ஓதாமல்
எந்தப் புகழோது வீர்?
4. அருணகிரி நாதன் அகிலதலத்து உன்னைக்
கருணையினால் பாடும் கவிபோல் –
பிரியம் உற வேறும் ஓர் புன்கவிகள்,
வேலோனே! நின் செவியில் ஏறுமோ? என்னே இனி?
5. ஆனை முகவற்கு இளைய ஐயா!
அருணகிரி தேன் அனைய சொல்லான் திருப்புகழை –
யான்நினைந்து போற்றிடவும்,
நின்னைப் புகழ்ந்திடவும்,
பொற்கமலம் சாத்திடவும்,
ஓதிடவும் தா.
திருப்புகழ்ப் பாடல்களைக் கேட்பதன் பயன்
------------------------------------------------------------------------------------
6. வேதம் வேண்டாம், சகல வித்தை வேண்டாம்,
கீத நாதம் வேண்டாம், ஞானநூல் வேண்டாம், -
ஆதி குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றும்
திருப்புகழைக் கேளீர் தினம்.
திருப்புகழை ஓதுவதால் பெறப்படும் பயன்
-----------------------------------------------------------------------------------
7. ஞானம் பெறலாம், நலம் பெறலாம்,
எந் நாளும் வானம் அரசாள் வரம் பெறலாம், -
மோன வீடு ஏறலாம்,
யானைக்கு இளையான் திருப்புகழைக் கூறினார்க்கு ஆமே இக் கூறு.
8. ஆறுமுகம் தோன்றும், அழகியவேல் தோன்றும்,
அவன் ஏறுமயில் தோன்றும், எழில்தோன்றும், -
சீறிவரு சூரன் முடியைத் துணித்தோன்
திருப்புகழைப் பாரில் வழுத்தினோர் பால்.
அன்பர் வினவ, ஆண்டவன் விடை அருளியது
--------------------------------------------------------------------------------------
9. பொருப்பு அது பொடிப்பட விடுத்திடு கை வேலா!
இருப்பிடம் உனக்கு எது எனக்கு அருள் இயம்பாய்;
உருக்க நல் விழுக்குலம் ஒழுக்கம் இலரேனும்
திருப்புகழ் படிப்பவர் மனத்தினில் இருப்பாம்.
திருப்புகழ் படிப்போர் தீரம் கூறியது
---------------------------------------------------------------------
10. திருப்புகழ் படிக்கும் அவர் சிந்தை வலுவாலே
ஒருத்தரை மதிப்பது இலை,
உன்தன் அருளாலே,
பொருப்பு உக மிகப்பொருது வென்று,
மயில் மீதே தரித்து ஒரு திருத்தணியில் நின்ற பெருமாளே.
11. ஓர் ஆறு மாமுகனாம் உச்சித மெய்ஞ்ஞான குகன் பேரால்,
அருணகிரி பேர் உலகில் –
சீர் ஆரும் தோத்திரம் அதாகத் துதிக்கும் திருப்புகழை
ஏத்தினவர் ஈடேறு வார்.
12. வள்ளி மணவாளன், மயில் ஏறும் வள்ளல்தனை,
தெள்ளு தமிழால் புனைந்து,
சீர்பெறவே, -
உள்ளபடி வைப்பாம்
அருணகிரி வாழ்த்தும் திருப்புகழைக்
கற்பார் கரை ஏறுவார்.
13. அருணகிரி நாதர் பதினாயிறாயிரம் என்று
உரைசெய் திருப்புகழை ஓதீர், -
பரகதிக்கு அஃது ஏணி;
அருட்கடலுக்கு ஏற்றம்;
மனத்தளர்ச்சிக்கு ஆணி;
பிறவிக்கு அரம்.
திருப்புகழின் பிரபாவம்
----------------------------------------------
14. மடங்கல் நடுங்கும் தனைச்சுடும் ஈதென்று;
மாதிரத்தோர் அடங்கி நடுங்குவர்
சூலாயுதம் என்று, அசுரர் கடல் ஒடுங்கி நடுங்குவர்
வேலாயுதம் என்று,
உரகனும் கீழ்க் கிடங்கில் நடுங்கும்,
மயிலோன் திருப்புகழ் கேட்டளவே.
15. தருப்புகழ் வல்ல சுரர் மகள் நாயகன்,
சங்கரற்குக் குருப்புகழ் வல்ல குமரேசன்,
சண்முகன், குன்று எறிந்தோன்,
மருப்புகழ் வல்ல அருண கிரிப்பெயர் வள்ளல் சொன்ன
திருப்புகழ் வல்லவர்
சீர்பாதத் தூளிஎன் சென்னியதே.
திருப்புகழ் அடியார் பெருமை
---------------------------------------------------------
16. திருப்புகழைக் கற்க,
திருப்புகழைக் கேட்க,
திருப்புகழை நித்தம் செபிக்க, -
திருப்புகழை அர்ச்சிக்க,
முத்தி எளிது ஆகுமே,
கூற்றை வென்று
கெர்ச்சிக்கல் ஆமே கெடீ.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: